Tirunelveli

News April 26, 2025

நெல்லை: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு குறைகளை புகார் அளிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!

News April 26, 2025

அப்பு விளை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் 2023 அக்டோபரில் உயிரிழந்ததை அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உடனடியாக தெரிவிக்காமல் கால தாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊராட்சி செயலர் சுமிலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

News April 26, 2025

நெல்லை: பள்ளி சத்துணவு மையங்களில் வேலை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர்(பெண்) காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.3,000 – ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.26) இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர்

News April 26, 2025

காட்டுப்பன்றியை சுட்டு பிடிக்க துப்பாக்கி வாங்க ரூ.5 கோடி

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள துப்பாக்கி வாங்க வனத்துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

News April 26, 2025

நெல்லை முக்கிய ரயிலில் 3ஆம் தேதி முதல் புதிய மாற்றம்

image

நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் 12 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டார். இதை அடுத்து வரும் 3ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News April 26, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் தடுப்பு செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

News April 25, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.25] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 25, 2025

அரசு பேருந்துடன் மினி லொடு வேன் மோதி விபத்து

image

திசையன்விளையில் இருந்து நவ்வலடி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நவ்வலடியிலிருந்து திசையன்விளை நோக்கி வந்த மினி லோடு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லோடி வேன் சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News April 25, 2025

நெல்லை வெற்றிகரமாக நடக்கும் அறுவை சிகிச்சை

image

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் Dual Chamber Pacemaker அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றும் தற்போது வரை 25 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 25 தடவை இந்த அறுவை சிகிச்சை, நெல்லை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!