Tirunelveli

News December 4, 2024

காதலை கைவிட மறுத்ததால் கொன்றேன்: கொலையாளி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை பகுதியை சேர்ந்த விஜயகுமார்(25) என்பவர் பாளையில் உள்ள தனது காதலியை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார். கைதான புஷ்பராஜ் சிம்சன் போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில், என் தங்கை மீதான காதலை கைவிட மறுத்ததால் அவரை ஊருக்கு வரவழைத்து வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

நெல்லை மாவட்டத்தில் 5 பிடிஓ-க்கள் இடமாறுதல்

image

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 5 பிடிஓ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ விடுப்பில் உள்ள ராஜம் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த முத்தையா நாங்குநேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜேஷ்வரன் மானூருக்கும், உமா களக்காட்டிற்கும், கண்ணன் அம்பைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

News December 4, 2024

திருநெல்வேலியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்

image

#திருநெல்வேலியில் இன்று(நவம்பர் 4) நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.#காலை 10.30 மணிக்கு நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையர் தலைவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.

News December 4, 2024

மேலப்பாளையம் SSI விபத்தில் உயிரிழப்பு!

image

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து. தற்போது உதவி ஆய்வாளராக பயிற்சியில் இருந்த முத்து, இன்று(டிச.,4) காலை நாகர்கோவில் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் படுகாயத்துடன் பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 4, 2024

ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்த மா.செ. அழைப்பு

image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி வருகின்ற 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் அதிமுகவினர் அனைவரும் கலந்துகொள்ள நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று(டிச.,3) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 3, 2024

தயார் நிலையில் மணல் மூடைகள்

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. 2 நாட்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழையும் பெய்தது. நேற்றும் இன்றும் மழை பெய்யவில்லை. மழைக்காலங்களில் குளம் மற்றும் குட்டைகளில், கரையில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் மணல் மூடைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளது.

News December 3, 2024

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

image

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்ததில் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று (டிச.3) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பண பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News December 3, 2024

அரிய வகை பாம்புகளை கடத்தினால் 7 ஆண்டு சிறை

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக, அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா நேற்று(டிச.,2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்பிரிவு 4-ன் கீழ் வனத்துறையினர் அரிய வகை பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆதலால், மண்ணுளிப் பாம்பு போன்ற அரிய வகை பாம்புகளை கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளார்.

News December 3, 2024

நெல்லையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நெல்லை பாளையங்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகின்றனர்.

News December 3, 2024

முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் குறித்த தீர்மானம்: அப்பாவு

image

சென்னை தலைமை செயலகத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும், முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தனி தீர்மானத்தை முதல்வர் கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!