India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ராம நாராயண பெருமாள் என்பவர் அந்த பகுதிக்குட்பட்ட சங்கனாபுரம் விவசாய கிணற்றில் இன்று தவறி விழுந்துள்ளார். இதுக்குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த நபரை பத்திரமாக மீட்டனர்.

நாக்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்தர்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கபடும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது www.bcmbcw.tn.gov.in இணையதளத்தில் பெற்று, நவம்பர் 30-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த சொகுசு நகர பேருந்துகள், மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்தாக மாற்றி இயக்கபட்டு வருகிறது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டல மேலாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்: திருநெல்வேலியில் வருகின்ற அடுத்த 15 நாட்களுக்கு பொதுமக்கள் அனுமதியின்றி கூடுதல் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பாக இந்த உத்தரவானது நாளை (ஆகஸ்.06) முதல் வருகின்ற (ஆகஸ்.20) வரை அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில், இந்திரா காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சந்தன குமார், மீன் பிடிக்க சென்றபோது ஊரா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு பெற்றார். மாநகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே ஆர் ராஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை, சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மாணவி வீட்டில் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இன்று மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுக்குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை.

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.