Tirunelveli

News December 16, 2024

பாபநாசம் அணையிலிருந்து 400 கன அடி நீர் வெளியேற்றம்

image

நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது பரவலாக கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் அணைக்கு இன்று (டிச.15) இரவு 9 மணி நிலவரப்படி 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

News December 15, 2024

நெல்லையில் நாளை 10 பகுதிகளில் சிறப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமானது நாளை (டிச.16) அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, பாளையங்கோட்டை, நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ளது.

News December 15, 2024

தமிழகத்திலேயே முதல் இடத்தை பெற்ற ஊத்து

image

நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (டிச.15) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்துப்பகுதியில் 2016 மில்லி மீட்டர் மழை பதிவாகி முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாலுமுக்கு பகுதியில் 1812 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது.

News December 15, 2024

நெல்லையில் நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பா.?

image

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிச.15) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மாவட்டத்தில் மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட உள்ளன. முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 15, 2024

நெல்லை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.15) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 15, 2024

வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக – எம்.பி

image

சேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு அரியநாயகிபுரம் கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் பலத்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று (டிச.15) நெல்லை தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News December 15, 2024

குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி – ஆட்சியர் தகவல்

image

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் உறை கிணறு மற்றும் மின் மோட்டார்கள், பைப்புகள் வயர்கள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது. படிப்படியாக குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 9786566111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

நெல்லை – ஷாலிமார் ரயிலை நீட்டிக்க வலியுறுத்தல்

image

பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர் வட்டார ரயில் பயணிகள் பலனடையும் வகையில் நெல்லை – ஷாலிமார் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோல் மதுரை கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

News December 15, 2024

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று அனுமதி

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லும் வழியில் நேற்று மழை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது .இதனால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று(டிச.15) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

நெல்லை மாவட்டத்தின் இன்றைய நிகழ்வுகள்

image

காலை 8.30 மணிக்கு காரியாண்டியில் வெள்ளநீர் கால்வாய் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். காலை 9:00 மணி முதல் வடக்கு சங்கன் திருடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நொச்சிகுளத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. நெல்லை இஸ்கான் கோயிலில் மாலை ஐந்து முப்பது மணிக்கு பகவத் கீதை வைபவம் நடக்கிறது.

error: Content is protected !!