India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 28ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக மையத்தின் தலைவர் சிபி தாமஸ் நேற்று தெரிவித்துள்ளார். எனவே இதில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவருமான செல்வ பெருந்தகை அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்தியா கூட்டணி பற்றி பேச எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடத்தை விட்டு விட்டு பாடியவர்கள் தான் சீமான் விமர்சிக்க வேண்டும் ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை விமர்சிக்கிறார் என்று கூறினார். COMMENTIT
திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கோரிக்கை வைத்துள்ளார்.
சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் இன்று திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட மேம்பாட்டிற்காக 50 கோடி ரூபாய் செலவில் 47 ஏக்கர் நிலத்தில் பணிகள் அனைத்தும் தொடங்க நிலம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
திருச்சியின் முக்கிய அடையாளமாக திகழ்வது மலைக்கோட்டை. திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழும் மலைக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் (100 கோடி) ஆண்டுகளுக்கு பழமையானது. மேலும் கீழே மாணிக்க விநாயகர், மேலே உச்சிப்பிள்ளையார், இடையே தாயுமானவர் என 3 சாமிகள் அமைந்துள்ளன. ஷேர் செய்யவும்
டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி புருலியா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 23ஆம் தேதியும், ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயில், கோரக்பூர்-விழுப்புரம் அதிவிரைவு ரயில் வரும் 24ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.