India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்ல திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் புத்தகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் அம்பிகாபுரம், அபிஷேகபுரம், சமயபுரம், புத்தாநத்தம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, வள்ளுவர் நகர், மிலிட்டரி களிமண், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வையம்பட்டி அடுத்த ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் மீது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு பின்பு உயிரிழந்தார். இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, அவரது மகன் ரவி ரோமாஸ் சார்லஸ்-க்கு 7 ஆண்டுகளும், மனைவி ரெஜினா மேரிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
காதலிப்பதாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி, கைவிட்ட திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனை சேர்ந்த காவலர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை ஏமாற்றி தனது குடும்பத்தினரை மிரட்டி தாக்கிய ஆயுதப்படை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக கொள்கை கோட்பாடுகளை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியின் ஏ டீம், பி டீம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு என தெரிவித்தார்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி 6ம் நாளான இன்று சூரசம்ஹாரம்நடைபெற உள்ளது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு திருச்சி வழியே தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயிலானது நேற்று இரவு 10.30க்கு புறப்பட்டது. பின்னர்
இன்று இரவு நவ,7ம் தேதி இரவு 10.15க்கு திருச்செந்தூரில் இருந்து திருச்செந்தூர்- எழும்பூர் சிறப்பு ரயில் புறப்படும் என்று திருச்சி தெற்கு ரயில்வே நிர்வாக மேலாளர் நேற்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளன் பகுதியை சேர்ந்த பெரியசாமி ஜீவா (45). கூலி வேலைக்கு செல்வதற்காக மணச்சநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்ற ஜீவா மீது துறையூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வந்த தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஜீவா படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கே.கே.நகரில் கடந்த செப்டம்பர் மாதம் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 1¼ பவுன் நகையை பறிப்பு மற்றும் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகமது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவட்சன் குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனையும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க கோரி தீர்ப்பளித்தார்.
திருச்சி பாபு ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை விற்பனை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரேவராம், கஜானா ராம் ஆகிய இருவரையும் கைது செய்து வாகனங்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகர் வயலூர் சாலையைச் சேர்ந்த ரெட்டி நலச்சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது மூன்று பிரிவுகளின் கீழ் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நிலையில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.