Tiruchirappalli

News November 5, 2024

தந்தை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை

image

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராமசாமி இவரது அருகிலுள்ள பள்ளியில் மகள் ப்ளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் மாணவியின் தந்தை அவரிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2024

விளையாட்டு விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

ஆண்டுதோறும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, பரிசு பெற திருச்சியை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மாவட்ட இளைஞர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

திருச்சி: மக்களிடமிருந்து குவிந்த 384 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, ஜாதி சான்றுகள், முதியோர் உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் என பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 4, 2024

இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

image

திருச்சியின் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு 2வது கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் காலியாக உள்ள மனைகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏதுவாக வரும் 5,6,7ஆம் தேதிகளில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News November 4, 2024

சுவிட்சர்லாந்து செலர்ஜின் பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்த எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அதில் மூன்று பயணிகள் 47 வெள்ளி நிற பொட்டலங்களுடன் வந்தது தெரிய வந்தது. அது செலர்ஜின் சுவிட்சர்லாந்து உணவு பொருட்கள் என தெரியவந்தது. இதன் மதிப்பு 1.37 கோடி ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2024

மணப்பாறை அருகே கார் மோதி பெண் பலி

image

மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News November 3, 2024

தொட்டியம் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மாணவன்

image

திருச்சி, தொட்டியம் அடுத்த மேல காரைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலசமுத்திரத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று குளிக்கச் செல்வதாக சென்ற மாணவன் அரசலூரில் உள்ள கிணற்றில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு தீயணைப்பு துறையினர் பிரேதத்தை இறந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 3, 2024

மண்ணச்சநல்லூர் பகுதியில் மாரடைப்பால் வாலிபர் பலி

image

மண்ணச்சநல்லூர் அருகே வடக்கிப்பட்டி பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் ( 35) நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் ஒரு கிராமமே சோகத்தில் உள்ளது.

News November 3, 2024

டூவீலர் அரசமரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி

image

மணப்பாறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் பாசிக் நேற்று இரவு விராலிமலை சாலையில் டூவீலரில் அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அரசமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பாசிக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

படியில் தவறி விழுந்து ஒருவர் பலி – போலீசார் விசாரணை

image

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவர் புதுத்தெரு பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் படியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!