Tiruchirappalli

News March 26, 2026

திருச்சி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

திருச்சி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக் செய்து<<>> மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News March 26, 2026

திருச்சி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

திருச்சி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக் செய்து<<>> மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News March 26, 2026

திருச்சி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க.!

News March 26, 2026

திருச்சி: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 26, 2026

வாகன சோதனையில் ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனையில் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உறிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள 122 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>nitt.edu<<>> என்ற தளத்தில் ஏப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் “தி ரிஜிஸ்டர், என்.ஐ.டி, திருச்சி-15” என்ற முகவரிக்கு ஏப்.16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

உள்நாட்டு பயணிகள் வருகை 52% அதிகரிப்பு!

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் நிகழாண்டில் இதுவரை 9,846 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு 8,51,212 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த 2024-25 ஆம் ஆண்டை விட விமான சேவையில் 21 சதவீதமும், பயணிகள் வருகையில் 52 சதவீதமும் அதிகமாகும் என விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

News March 26, 2026

திருச்சி: விக்னேஷ் குடும்பத்திற்கு அமைச்சர் நேரில் ஆறுதல்

image

திருவெறும்பூர் தொகுதி மேல கல்கண்டார்கோட்டையை சேர்ந்த தவெக தொண்டரான கல்லூரி மாணவர் விக்னேஷ். இவர் விஜயை பார்க்கச் சென்றபோது விபத்தில்சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்ததை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

News March 26, 2026

திருச்சி: உடல் நசுங்கி இளைஞர் பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் நீடுரை சேர்ந்தவர் கார்த்திக்(31). இவர் திருச்சியிலிருந்து மதுரைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே நின்றபோது, கார்த்தி பைக் மீது மற்றொரு பைக் மோதியுள்ளது. இதில், கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 26, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.44.25 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில், நேற்று(மார்ச் 25) மாலை வரை ரூ.44,25,820 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.21,57,380 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!