Tiruchirappalli

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாம்

image

திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும், புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். ஷேர் செய்யவும்

News November 15, 2024

முதல்வரை வழி அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்று (நவ.15) சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதல்வரை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் சந்தித்து புத்தகம் வழங்கி அவரை உற்சாகமாக வரவேற்று வழி அனுப்பி வைத்தார்.

News November 15, 2024

359 கிராம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் மறைத்து கடத்தி வந்த ரூ. 27.14 லட்சம் மதிப்பிலான 359 கிராம் தங்க நகைகள் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 15, 2024

திருச்சி அருகே ஒருவர் வெட்டிக்கொலை

image

திருச்சி ஜீயபுரம் அருகே கொடியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மதிர்விஷ்ணு. இவர் இதே பகுதியைச் சேர்ந்த மாணவர் கோகுல் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அரசு பேருந்தில் ஏறினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் விஷ்ணுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 15, 2024

துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு

image

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசின் பொது துறை நிறுவனமான யந்திரா இந்தியாவில், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை (75) உள்பட 3,883 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித் தகுதி 10 & ITI, வயது 35க்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 21.11.2024 அன்று கடைசி நாளாகும்.

News November 15, 2024

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது

image

புத்தாநத்தம் அடுத்த அழககவுண்டம்பட்டி பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, பிள்ளமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வாலிபர் சிறுமியை முள் காட்டிற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேற்று போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

News November 15, 2024

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முசிறி, திருவெறும்பூர், மணப்பாறை, தென்னுர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 14, 2024

திருச்சியில் இருந்து சபரிமலைக்கு சொகுசு பேருந்து

image

திருச்சி அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, வரும் 15ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக சபரிமலைக்கு அதிநவீன சொகுசு மிதிவண்டிப் பேருந்து இயக்கப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன் இந்த பேருந்துகளுக்கு www.tnstc.in ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

திருச்சியில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியர்

image

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் 20ம் தேதி புதன்கிழமை தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளை கண்டறியும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முகாமில் காது கேட்க வாய் பேச முடியாத குழந்தைகள் பங்கேற்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News November 14, 2024

விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அறிவிப்பு

image

வேளாண் அறிவியல் நிலையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெற்பயிரில் மகசூல் அதிகரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ள இந்த ஒரு நாள் பயிற்சியில் விவசாயிகள் 9865542358 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!