India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஆட்சியர்அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.இலவச மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், தேர்தலின்போது அறிவித்தபடி மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யவேண்டும் மேலும் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் நெல்லுக்கு லாபகரமான உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மணப்பாறை கண்ணுடையான் பட்டி பகுதியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் ( 27) மனைவி செல்சியா (25). இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை பிரிமிகா உள்ளார். பாண்டியன் தனது மகள் பிரிமிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது குறுக்கே நாய் வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், பிரிமியா தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் களமாவூர் டோல்கேட் அருகில் பிஎல்ஏ என்ற தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு உடல்நலக்குறைவால் சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக அமைச்சர் நேரு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் செய்யவும்
தச்சங்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று பள்ளியில் நடந்த அணி வகுப்பில் பங்கேற்ற பிறகு, வகுப்பறைக்கு சென்ற வெற்றிவேலன் திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூா் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.26) நடைபெறவிருந்த இளநிலைப் மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, குழந்தைகள் நலத்திட்ட உதவிகள், ஜாதி சான்றுகள், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான மக்கள் மனு அளித்தனர். இதில் மொத்தம் 714 மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நீர் பாசனம், இடுபொருட்கள் குறித்த குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் நாளை (நவ.26) மற்றும் நாளை மறுநாள் (நவ.27) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்!
திருச்சி தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வரும் கவியரசன் நேற்று மாணவர்களை புள்ளம்பாடி பகுதியில் இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரமேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் டூவீலரை பேருந்தின் முன்பு நிறுத்தினர். பின் கவியரசன் அவரிடம் வண்டியை எடுக்க சொன்னபோது ரமேஷ் ஆத்திரத்தில் கத்தியால் கவியராசனை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.