Tiruchirappalli

News December 4, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 15-12-24 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8248470862 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி முக்கிய தகவல்

image

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

கிணற்றில் சீறிப்பாய்ந்த கார்

image

உப்பிலியபுரம் அடுத்துள்ள புடலாத்தி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரிடம் டிரைவராக ஒக்கரையை சேர்ந்த பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வரதராஜன் கார் ஓட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமியிடம் கூறியதை தொடர்ந்து வெங்கடாசலபுரம் பகுதியில் கார் ஓட்ட பழகிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக கார் அருகில் இருந்த கிணற்றில் சீறிப்பாய்ந்தது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News December 4, 2024

திருச்சி சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை மாவட்ட சுகாதார துறை மூலம் நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0431-2333112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News December 3, 2024

முன்னாள் முதல்வரின் செயலாளர் இன்று காலமானார்

image

திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி தாளாளரும், முன்னால் தமிழக முதல்வர் மறைந்த கலைஞரின் செயலாளர் ராமன்I.A.S இன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவரும், தமிழக முதல் வருமான மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

News December 3, 2024

திருச்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 3, 2024

போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் கைது

image

திருச்சி கோட்டை போலீசார் இன்று மேலபுலிவார்டு சாலை, நடுகுஜிலி தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை விசாரித்ததில், அவர்கள் இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பிரவீன் கார்த்தி, விக்னேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் ரவுடிகள் என்பது தெரியவந்தது.

News December 3, 2024

வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்த திருச்சி எம்எல்ஏ

image

அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை வாடிகனில் இன்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும்,திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிக்கோ இருதயராஜ் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார். இந்த சந்திப்பின்போது,கிறிஸ்தவ மக்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும், வாழ்க்கை சூழல் குறித்தும் திருச்சி எம்எல்ஏ எடுத்துரைத்தார்.

News December 3, 2024

இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (24). கடந்த மாதம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே டாஸ்மாக் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் வைத்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25) உள்ளிட்ட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 3, 2024

மாவட்ட காவல்துறையில் ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வருகின்ற 10.12.2024 அன்று காலை 10:00 மணிக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 09.12.2024 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!