India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக வணிகரீதியாக பயன்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் பா.ஜ.க.வை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வும் வளர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜன.6) மணிகண்டம், அளுந்தூர், பெட்டவாய்த்தலை, திருச்சி மெயின் கார்டுகேட் துணை, கம்பரசம்பேட்டை ஆகிய 5 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறப்படும் பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியை பகிரவும்!
கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி (06.01.2025) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (07.01.2025) அன்று இருக்காதென மாநகராட்சி ஆணையர் இன்று கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் கோப்பையுடன் தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். உடன் பஜார் மைதீன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், அமீரக நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள், அதிகமாக பயணம் செய்பவர்களை தனியாக தடுத்தும், அத்துமீறல் செய்வது மனக்கசப்பை ஏற்படுத்தும். பேசும் பொருளாக உள்ளது. எனக்கும் கெட்ட பெயரை உருவாக்கும். இது அறிக்கை கேட்டுள்ளேன் என தெரிவித்தார்
திருவெறும்பூர் அருகே தனியார் மதுபான பார் பின்புறம் நாட்டு துப்பாக்கியுடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த காட்டூர் கோபால், அண்ணா நகர் முத்துப்பாண்டி, ஜோதிபுரம் ராஜா முகமது ஆகிய மூன்று பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, போதை மாத்திரைகள், 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக உள்ள ரமேஷ் பாபு கடந்த 01.04.18 ஆம் ஆண்டு முதல் 31.12.21 ஆண்டு வரை அவரின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ரமேஷ் பாபு மற்றும் அவரது மனைவி இருவரின் மீது திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே நிர்வாகம் திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பு ரயில்(06190) ஜனவரி 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் மாலை 3.30 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிட்டு 2 நாட்கள் தான் ஆகின்றன.முதலில் எந்தெந்தப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைகிறது,என்பதற்கான உத்தேசமாக 22 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்துள்ளோம்.மேலும்,2026-ல் நடைபெறும் மாநகராட்சி தேர்தலானது,புதிய வார்டுகளுடன்,மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக நடைபெறும்” என்றார்.
திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற 12ஆம் வகுப்பு (அ) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.