India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 50 டூவீலர்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 30-ம் தேதி காலை 9:30 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் 29-ஆம் தேதி வாகனங்களை பார்வையிட்டு, முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்கள்,2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 30-ம் தேதி காலை 9:30 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே,விருப்பம் உள்ளவர்கள் 29ம் தேதி வாகனங்களை பார்வையிட்டு, முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
சமயபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. வியாபாரியான இவர் அப்பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட கார் ஒன்று ஈஸ்வரி மீது மோதி அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சமயபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (டிச.28) உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருச்சி யிலிருந்து கரூர் வரை செல்ல முன்பதிவு பெற்ற சிறப்புரையில் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் அதிகாலை 5. 25க்கு புறப்படும் எனவும் 7.20க்கு கரூர் வந்து சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் பெயரில் சில ரயில்கள் இயக்கப்பட உள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது….
மணப்பாறையில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளனி விழாவினை, வெற்றிகரமாக நடத்த 8 இயக்குனர்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பிரிந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். மேலும் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றி, பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சியில் தி.க தலைவர் கி.வீரமணி இன்று பேசுகையில், சனாதனவாதிகள் நாட்டை பின்னோக்கி தான் அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு உதாரணம் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம். 21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கையில் அவர் இரண்டாம் நூற்றாண்டிற்கு மக்களை அழைத்து செல்ல பார்க்கிறார். ஐ.பி.எஸ் ஆனவர் இந்த நிலைக்கு ஆளாகி விட்டாரே என்பதை நினைத்து பரிதாபபடுகிறேன் என தெரிவித்தார்.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மத்திய காவல் மண்டலத்தில் நிகழாண்டு (2024) திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 2,414 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.10 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் சரியான முறையில் சாட்சியங்களை ஆஜர்படுத்தியும் 209 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (27) என்பவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இவரிடம் 12 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போது சிறை வார்டன் எழில்ராஜ் தனக்கு கஞ்சா வழங்கியதாக கைதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறை வார்டன் எழில்ராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி உத்தரவிட்டார்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு விருப்ப ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார். இவரது மகன் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் துறையூர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அணியாப்பூர் கிராமம் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடும் இடத்தில், வரும் 29ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை கேரளா குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனிதன் நடமாட்டம் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.