Tiruchirappalli

News January 1, 2025

Way2Newsஇல் திருச்சி நிருபராக விருப்பமா?

image

Way2News Appஇல் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். மேலும் நீங்கள் பள்ளி,கல்லூரியில் பணிபுரிபவரா? அரசு அலுவலரா? சமூக ஆர்வலரா? உங்கள் வேலை, பகுதி சார்ந்த நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும் விவரங்களுக்கு +9193845 21214 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

News January 1, 2025

திருச்சியில் மின்தடை

image

திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் வரும் (03-01-25) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் இ.பி. சாலை, காந்தி சந்தை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், உக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 3 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

திருச்சி ரயில்களின் நேரம் மாற்றம்

image

திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் நாளை (01-01-2025) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ஈரோடு – திருச்சி ரயில்களானது காலை 7 மணிக்கு பதிலாக 7.20க்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.50க்கு வந்தடையும். திருவாரூர் – திருச்சி ரயிலானது காலை 7 மணிக்கு பதிலாக 6.55க்கு வந்தடையும். ஷேர் செய்யவும்

News December 31, 2024

திருச்சி மக்களே நீங்கள் சொல்லுங்கள்

image

திருச்சி மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைய உள்ளோம். கடந்த 2024ஆம் ஆண்டில் திருச்சிக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில், புதிய புதிய அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி இந்த வருடத்தின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News December 31, 2024

அமைச்சர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது

image

திருச்சி மாநகராட்சியில் நடைபெறும் பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் சுனக்கமாக நடைபெறுவதை கண்டித்து திருச்சி மரக்கடையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
..

News December 31, 2024

59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் 

image

மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் 10 வயதான இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே சிறுமிக்கு மேஜிக் கலை மீது  ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளம் வயதிலேயே கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்ததில் 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.

News December 31, 2024

திருச்சி மாநகரில் 350 காவல் அதிகாரிகள் ரோந்து பணி

image

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன வீலிங் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், நள்ளிரவு ரூம் மற்றும் பாதுகாப்பு பணியில் மாநகரில் மட்டும் 350 போலீசார் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்

News December 31, 2024

ஜன.10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

image

திருச்சி மாவட்ட ஆட்சியர்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஏகாதேசி திருவிழாவின்,முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளான 10ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.இந்த விடுமுறையை ஈடு செய்ய 25.01.25ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார்.

News December 30, 2024

புத்தாண்டு: வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

image

திருச்சி மாவட்ட வன அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:ஸ்ரீரங்கம் வட்டம்,மேலூரில் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா புத்தாண்டு விடுமுறையை ஒட்டி,பார்வையாளர்களுக்காக வரும் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். எனவே பொதுமக்கள், குடும்பத்தினருடன் வருகை தந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 438 மனுக்கள் வருகை தந்தது.இதில்,இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

error: Content is protected !!