India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுகனூர் தீரன் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், உடையார் பாளையத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அப்பெண் கடந்த 6 மாத காலமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் நேற்று அவரது வீட்டின் அருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் இன்று நடைபெற்ற 76 ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 418 அரசு அலுவலர்கள் மற்றும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், முதலமைச்சரின் காவல் பதங்கங்கள் 90 காவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர் காவல் ஆணையர், காவல்துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வேங்கைவயல் விவகாரத்தில் திமுக யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை செய்தால் தான் சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார்.
திருச்சி பெல் நிறுவனத்தில் 400 காலியிடங்கள் உள்ளதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 27-29 வயதுக்குள் இருக்க வேண்டும். கணினி வழி தேர்வு உள்ளதாகவும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் ரகுபதி. இவர் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மாநில அளவில் அஞ்சல் வாக்கு மையம் அமைத்து சிறப்பாக பணியாற்றியதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்று மட்டும் கேடயத்தை வழங்கினார்.
2025-26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதியதொழில் பிரிவுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதனை பிப்.2 முதல் <
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘கொஞ்சநஞ்சம் பேச்சா.. திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்’ என நாதக சீமானை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளது, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பொருளாக மாறியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரின் மகன் சாரநாதன் நேற்று அவரது நண்பர் கோகுல்நாத்துடன் காவேரி பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்களுக்கு எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,15 வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.பிறகு,தேர்தல் இலச்சின் வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.