India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘கொஞ்சநஞ்சம் பேச்சா.. திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்’ என நாதக சீமானை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளது, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பொருளாக மாறியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரின் மகன் சாரநாதன் நேற்று அவரது நண்பர் கோகுல்நாத்துடன் காவேரி பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்களுக்கு எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,15 வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.பிறகு,தேர்தல் இலச்சின் வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக முதல்வர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினருக்கு பஸ் பாஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி. திருச்சி மாநகரத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை இலவச பஸ் பாஸ் கிடைக்க, திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்திற்கு மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் பெயர் பட்டியலை வழங்கி இலவச பஸ்பாஸ் பெற அறிவுறுத்தினார்.
திருச்சி மாநகராட்சி 42வது வார்டு பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு, அதன் உரிமையாளர் துணியை வைத்து செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றி திரிந்த ஒரு ஜல்லிக்கட்டு காளை திடீரென அவரை முட்டியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு சூரியூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா குழுவினரிடம் வழங்கினார். இந்த ஸ்டேடியம் அமைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினை தான் உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அப்படி ஆனாலும் மரியாதை கிடைப்பதில்லை. இது போன்ற நிலை நாட்டில் மாற வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட காவல்துறை இன்று பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு வெகுமதியாக ரூ.6500 கிடைத்துள்ளதாகவும், apkவை Install செய்து உடனடியாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், வாட்ஸ்ஆப் குழுவில் வரும் செய்திகளை நம்பி எந்த ஒரு apkவையும் Install செய்ய வேண்டாம். இதனால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படலாம் என எச்சரித்துள்ளது. SHARE IT
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, தொட்டியம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (26/01/2025) குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகள் குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் போன்றவற்றை விவாதிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.