India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பரசம்பேட்டை பகுதியில் 163 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.13.70 கோடி மதிப்பில் பறவைகள் பூங்கா கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் இந்த கட்டுமான பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த பூங்காவை வருகிற 9 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பாறை வட்டம், தெப்பம்பட்டி ஊராட்சி, குதிரைக்குத்திபட்டியில் பச்சகுதிரை ஊராளி பாய்ஸ் & ஊராளி இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் 15-ஆம் ஆண்டு ‘ஒரு ஊர் கபடி போட்டி’ வரும் பிப்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விருப்பமுள்ள அணிகள் ரூ.500 நுழைக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 7708517956, 8220785752 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில், சிற்றுந்து புதிய திட்டத்தின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய தமது கருத்துக்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் பேருந்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். வழித்தடங்களின் மனு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, புதிய அரசாணையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில், தடத்தில் எத்தனை விண்ணப்பம் பெறலாம் என வட்டார அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சிறப்பு திட்ட செயலாக்க துறை கண்காணிப்பு அலகில், இளம் தொழில் முறை வல்லுநர் பணிக்கு வெளி முகமையிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு கணினி அறிவியல், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு, தகவல் தொழில்நுட்பம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் திருச்சி புள்ளியியல் துணை இயக்குனரை அணுக வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு பணிகளை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் ராஜேந்திரனை, திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமிதா அரசாணை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காளைகளின் விவரங்களை, தமிழக அரசின் வழிகாட்டுதல் படி, காளை உரிமையாளர்கள் ஆதார் அட்டை நகல், காளைகளுக்கான மருத்துவ தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் <
லால்குடி ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி(25). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளது. கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீனாட்சி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளி துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழில் பிரிவுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.5,000, ஆய்வு கட்டணம் ரூ.8000 ஆகும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.2.2025 என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் இன்று ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயில் பயணிகள் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களான எளிதில் தீப்பற்ற கூடிய சிலிண்டர்கள், பட்டாசு பொருட்கள், மற்றும் மண்ணெண்ணெய் கேஸ் அடுப்பு திரவங்களை எடுத்து செல்லக்கூடாது என அறிவித்துள்ளது. இதனை மீறுவோர் ரயில்வே சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (39) பெயிண்டர். இவர் இன்று வேங்கூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவம் அறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி இது குறித்து வழக்குப் பதிந்து கொலை செய்தவர்கள் யார்? கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.