Tiruchirappalli

News March 12, 2025

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை? போலீசார் விசாரணை

image

அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்(50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் காயத்துடன் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்

News March 11, 2025

பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்

image

உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் தன் பக்தர்களை பிள்ளைகளாக எண்ணி 48 நாட்களுக்கு பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச்.9-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வை முன்னிட்டு அடுத்து வரும் 7 வாரங்களுக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப்பெரிய பூச்சொரிதல் விழாவாகும். இந்நிகழ்வில் அம்மனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். SHARE NOW!

News March 11, 2025

திருச்சி இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பதிவு முகாம் இன்று காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை திருவரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் 21 வயதில் இருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம் விவரங்களுக்கு 9443644967 ஐ அழைக்கலாம். 

News March 10, 2025

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆணையர் ஆய்வு

image

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று (10.03.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News March 10, 2025

குறைதீர் கூட்டத்தில் 645கோரிக்கை மனு

image

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், உதவித் தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

News March 10, 2025

திருச்சி: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு- இன்றே கடைசி நாள்

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 9, 2025

துறையூரில் மூன்று நாள்கள் கபடி போட்டி

image

திருச்சி மாவட்டம், துறையூரில் யுகேஷ் என்பவரின் நினைவாக வரும் மார்ச் 11,12,13 ஆகிய மூன்று நாள்கள் கபடி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000, நான்காம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுடைய அணிகள் 74181-13432, 82200-87077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News March 9, 2025

கடன் தொல்லையால் விஷம் சாப்பிட்டு தற்கொலை

image

கூத்தூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (44) என்பவருக்கு கடன் நெருக்கடி இருந்ததால் இவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 9, 2025

திருச்சி: 3167வழக்குகளில் சமரச முறையில் தீர்வு

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,167 வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, சமரசத் தொகையாக ரூ.26.92 கோடி வழங்கப்பட்டது. இதை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எம்.கிறிஸ்டோபா் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் சி.சிவக்குமாா் செய்திருந்தார்.

News March 8, 2025

திருச்சி: விஜய் குறித்து அமைச்சர் பேட்டி

image

திருச்சி கலைஞர் அரங்கில் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று கலந்து கொண்ட பிறகு செய்திகளை சந்தித்தார். அப்போது ஊடகத்துறையில் விளம்பரம் தேடுவதற்காக தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பேசி வருகிறார். இந்த ஆட்சியை எப்படியாவது குறை கூற வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார். தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி, பெண்கள் பாதுகாப்புக்கான ஆட்சி ஆகும் என்றார்.

error: Content is protected !!