Tiruchirappalli

News February 7, 2025

அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு- திருச்சி எஸ்.பி அதிரடி

image

திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளியின் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமரா, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட எஸ்பி செல்வரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News February 7, 2025

முன்னாள் ராணுவ படையினருக்கு கடனுதவி: திருச்சி கலெக்டர்

image

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு தொழில் தொடங்க அரசு கடன் உதவி மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னாள் ராணுவப் படையினர் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவி ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்றும், இது குறித்த மேலும் தகவல்களுக்கு துணை இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 6, 2025

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதற்கு உரிய ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது நீதிமன்ற வளாகப் பின்புறத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பிரிவு மாணவ, மாணவியருக்கு மேல் படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாணவ, மாணவிகள் https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார். SHARE NOW !

News February 6, 2025

மலக்கழிவு விவகாரம்: காவல்துறை விளக்கம்

image

திருச்சி வடக்கு தையல்கார தெருவில் மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் மலக்கழிவு போன்ற பொருள் கிடப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் அதனை அப்பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் வீசியிருப்பதும், இது பற்றி விசாரணை தொடர்வதாகவும், மேலும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அதனை சுத்தம் செய்து விட்டனர் என்றும், இது திட்டமிட்டு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.

News February 6, 2025

திருச்சி – சென்னை விமான கட்டணம் அதிரடி குறைப்பு

image

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே அளித்து வருகிறது. மார்ச் 22 முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி-சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. இந்நிலையில் இண்டிகோ நிறுவனம், ஏர்இந்தியா வருகையை சமாளிக்க அதிரடியாக கட்டணத்தை குறைத்துள்ளது. சென்னை-திருச்சி தடத்தில் ரூ.1,499, திருச்சி-சென்னை தடத்தில் ரூ.2,499 என குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

News February 6, 2025

திருச்சி அருகே சாலை விபத்தில் அரசு மருத்துவர் பலி

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பிராட்டியூரைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். இவர் விராலிமலை அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரில் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News February 6, 2025

பாரதிதாசன் பல்கலைக்கழக பொறுப்புக் குழு பதவி ஏற்பு

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவி காலம் பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில் துணைவேந்தர் செல்வம், தனது பொறுப்புகளை, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணன், சக்தி கிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பொறுப்புக் குழு புதன்கிழமை பொறுப்பேற்றது. அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை இந்தப் பொறுப்புக் குழு பல்கலைக்கழகப் பணிகளை மேற்கொள்ளும்.

News February 6, 2025

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி சமூக நல அலுவலக கட்டுப்பாட்டிற்கு OSC திட்டத்தின் கீழ் பணிபுரிய பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணியிடத்திற்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் திருச்சியில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT

News February 5, 2025

சாலை விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

image

விராலிமலை அரசு மருத்துவமனையின் முன்னாள் ஆர்த்தோ மருத்துவரான தீபக் ராஜ் இன்று வாகனத்தில் திருச்சி – சென்னை சாலையில், தனியார் கல்லூரி அருகே சென்ற போது அவ்வழியே சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீபக் ராஜ் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!