India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை இன்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அதிவேகம், கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் எனவும், சாலை விதிகளை மீறுவோர் குறித்தும், சாலை விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 -க்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தியை பகிருங்கள்..
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் “திருச்சி – சென்னை” மற்றும் “சென்னை – திருச்சி” வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமான சேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்த உள்ளது. இதில் பிஸினஸ் க்ளாஸ் 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி மற்றும் பலவித சலுகைகளுடன் 7 வருடங்களுக்கு பின்னர் உள்நாட்டு சேவையில் பிசினஸ் கிளாஸ் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மிளகு பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று, விவசாயி அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் 20ஆம் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜுவல்லர்ஸ் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் இயற்கை விவசாயிகள் முன்னெடுப்பு, கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பாரம்பரிய விதை திருவிழா 24 மணி நேர விதைகள் சங்கம் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் 2ஆம் தேதி காலை 9 மணி வரை நம்ம ஊரு விதை விற்பனை கூடம், கிராமாலய பயிற்சி மையம், கொளக்குடிபட்டியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மக்களே இத SHARE பண்ணுங்க…
சமயபுரம் அடுத்துள்ள தனியார் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஓருவர் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விழுந்தது குறித்த தகவல் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொழிற்பயிற்சி மையம், மண்ணச்சநல்லூர் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம், சூரியூரில் தொழிற்பேட்டை, முதல்வர் படைப்பகம் மற்றும் அன்பு சோலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மக்களே SHARE பண்ணுங்க..
திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்ராஜ்(64) கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில், பொன்ராஜ் மருமகளுக்கும், நிஷாந்த்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததை பொன்ராஜ் கண்டித்ததால் அவரை நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரசன்னா(20), குணசேகர்(21) ஆகியோர் தாக்கியுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து புத்தூர் வரை சுமார் ரூ.750 கோடி செலவில் 2 ரவுண்டானாக்கள், 5 இணைப்புகளுடன் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில், “தபால் நிலையத்தில் இருந்து புத்தூர் வரை இந்த பாலமானது அமைக்கப்படுகிறது. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும் ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளது” என கூறியுள்ளனர்.
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பெரிய கடை வீதி, சின்னகடை வீதி, ஜாபர்ஷா தெரு, கம்மாளத்தெரு, நடு குஜிலி தெரு ஆகிய பகுதிகளில் நாளை ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் வண்ணப் பொடிகள் விற்பனை நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.