Tiruchirappalli

News May 12, 2024

மூன்றாவது முறையாக சாலையில் ஏற்பட்ட பள்ளம்

image

திருச்சி, ஸ்ரீரங்கம், காந்தி சாலையில் மூன்றாவது முறையாக இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

News May 12, 2024

திருச்சி:காவல் தனி படையினர் ஆயுதபடைக்கு மாற்றம்

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில், தடை செய்யப்பட்ட,லாட்டரி, புகையிலை பொருட்கள், குற்ற சம்பவங்களை கண்காணிக்க SI லியோ ரஞ்சித்குமார் தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.இத்தனிப்படை மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அனைவரையும்,நேற்று, மாலை, ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

News May 12, 2024

திருச்சி:காவல் தனி படையினர் ஆயுதபடைக்கு மாற்றம்

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில், தடை செய்யப்பட்ட,லாட்டரி, புகையிலை பொருட்கள், குற்ற சம்பவங்களை கண்காணிக்க SI லியோ ரஞ்சித்குமார் தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.இத்தனிப்படை மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அனைவரையும்,நேற்று, மாலை, ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

News May 11, 2024

திருச்சி மழைப்பொழிவு விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சமயபுரம் பகுதியில் 7 செ.மீட்டரும், முசிறியில் 6 செ.மீட்டரும், தெய்வமங்கலத்தில் 5 செ.மீட்டரும், தென்பரநாடு, துறையூர் பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது. சமீபத்தில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

திருச்சி: ஹோட்டலில் தகராறு செய்த நபர்கள்

image

பெருகமணியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலையில் இருந்தபோது பூபாலன், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேர் உணவு சாப்பிட்டு விட்டு பணம் தராததால் ராஜசேகர் பணம் கேட்டதில் அவர்கள் 3 பேரும் இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் ராஜசேகரை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

News May 11, 2024

திருச்சி பச்சைமலை சிறப்பு!

image

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரைச் சேர்ந்த பச்சைமலை, திருச்சி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவியுள்ளன. சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள், இத்தொன்மையான பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகின்றன. பச்சைமலையானது 527.61 ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 154 பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, 135 வகை பட்டாம்பூச்சி இனங்கள் இங்கு வந்து செல்கின்றன.

News May 11, 2024

திருச்சி பச்சைமலை சிறப்பு!

image

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரைச் சேர்ந்த பச்சைமலை, திருச்சி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவியுள்ளன. சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள், இத்தொன்மையான பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகின்றன. பச்சைமலையானது 527.61 ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 154 பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, 135 வகை பட்டாம்பூச்சி இனங்கள் இங்கு வந்து செல்கின்றன.

News May 11, 2024

திருச்சி: மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலி

image

திருச்சியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.திடிரென்று இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இதையடுத்து திருச்சி, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து பகுதியில் விவசாய நிலத்தில் மழையால் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பெண்கள் பரிதமபாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 11, 2024

திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

திருச்சி: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!