India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.2) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் இன்று ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (80). விவ–சாயி. இவர் சம்பவத்தன்று மஞ்சமேடு கிராமத்தில் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள கொங்க ஓடை வாய்க்காலில் பிச்சைமுத்து மரமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பீமநகர் கொச தெருவை சேர்ந்தவர் சைமன் கிஷோர் (23). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி செம்மொழி ரயிலில் சென்று கொண்டிருந்த அஞ்சலி (31) என்ற பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சைமன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு
2. முசிறி வருவாய் கோட்டாட்சியர் அரமுத தேவசேனா விபத்தில் பலி
3. தவெக தலைவர் விஜய் பரப்புரை
4. சிறுகனூர் அருகே இளம்பெண் எரித்து கொலை
5. புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை திறப்பு
6. திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் ஜன.2, 4, 7 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <
Sorry, no posts matched your criteria.