Tiruchirappalli

News January 4, 2026

திருச்சி: கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

முசிறியை அடுத்த தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் ரவிக்குமார் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றவாளி சிவக்குமாருக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News January 4, 2026

திருச்சி: கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

முசிறியை அடுத்த தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் ரவிக்குமார் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றவாளி சிவக்குமாருக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News January 4, 2026

திருச்சி: கொலை வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

முசிறியை அடுத்த தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் ரவிக்குமார் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றவாளி சிவக்குமாருக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News January 3, 2026

திருச்சியில் உள்ள அதிசய கிணறு தெரியுமா?

image

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 3, 2026

திருச்சி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருச்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 3, 2026

அமித்ஷா வருகை – திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க தடை

image

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜன.4, 5) ஆகிய இரு தினம், திருச்சி மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடியை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

திருச்சி காவல்துறை அறிவிப்பு

image

குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்போம் எனவும், குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அல்லது திருச்சி மாவட்ட காவல் உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 3, 2026

திருச்சி: தொழில் தொடங்க ரூ.15 லட்சம்!

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் ‘UYEGP’ என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000 – ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

தடுப்பூசி முகாம்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வரும் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெற உள்ளன. காலை 6 மணி முதல் காலை 9:30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இம்முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!