Tiruchirappalli

News May 18, 2024

மணப்பாறை: மகனை கையை வெட்டிய தந்தை.!

image

மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் சதீஷ் குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 18, 2024

திருச்சியில் நல்லொழுக்க முகாம்

image

திருச்சி பாலக்கரை பகுதியில் இன்று சமூகநீதி மாணவர் இயக்கம் திருச்சி மண்டலம் சார்பில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி) என்கிற தலைப்பில் மாணவர்களுக்கான நான்கு நாள் நல்லொழுக்க முகாம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் அப்பீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார்.

News May 18, 2024

திருச்சியில் இருந்து ரத்து!

image

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், காரைக்குடியில் என்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வரும் 19ம் தேதி 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்த காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வாண்டி என்: 16849), ராமேஸ்வரத்தில் இருந்துமதியம் 2.35 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (16850) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.

News May 18, 2024

திருச்சி: செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு விசிட்

image

திருச்சிராப்பள்ளியில் உள்ள புராதான கட்டிடங்களை பார்வையிடுவதன் ஒரு பகுதியாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழமையான கட்டிடங்களை நேற்று ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஆட்சியர் அங்குள்ள பழமையான பொருட்கள் குறித்து பேராசிரியர்கள் இடம் கேட்டு அறிந்தார்.

News May 17, 2024

மஞ்சள் ஒட்டும் பொறி விளக்கம்

image

மே17, தொட்டியம் அருகே காடுவெட்டியில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். பூச்சிகளை அழிக்க உரிய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது பற்றியும் சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி பற்றியும் மாணவிகள் எடுத்துரைத்தனர்.

News May 17, 2024

திருச்சி அருகே வெளுத்து வாங்கிய மழை

image

தென் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான  ராஜபாளையம், நாகநல்லூர் , முத்தையம்பாலையம், காஞ்செரிமலைபுதுர் ஒடுவம்பட்டி ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை கனமழை பெய்தது. மழை காரணமாக இதமான சூழல் நிலவுகிறது. 

News May 17, 2024

திருச்சி: மழைக்கு வாய்ப்பு!

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருச்சியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

சவுக்கு சங்கர் மீது திருச்சியில் மேலும் ஒரு வழக்கு

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி இன்று திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை பெற்றுக்கொண்ட, கண்டோன்மென்ட் காவல் நிலையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 17, 2024

திருச்சி மாவட்டத்தில் மழை…!

image

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்ததையடுத்து இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், திருச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது.

News May 17, 2024

திருச்சி: டாஸ்மாக் கடையில் வெட்டு

image

கடந்த 21 ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் பிக் பாக்கெட் அடித்தவரை பிடிக்க முயன்ற நபரை அரிவாளால் வெட்டி தாக்கிய வழக்கில் அபிஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது உள்ள தொடர் வழக்குகள் காரணமாக மாநகர காவல் ஆணையர் காமினி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அபிஷேக் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

error: Content is protected !!