India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடம், ராணுவ துறையினரிடம் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க உத்தரவிட்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில், இன்று (19.5.24) பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ குண்டு மல்லி விலை ரூ.900க்கும், அரும்பு 800க்கும், செவ்வரளி 450க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ 70 க்கும் விற்கப்படுகிறது. பூக்கள் வரத்து குறைவு என்பதாலும், இன்று முகூர்த்த தேதி என்பதால் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்தனர்.
துறையூர் அருகே வசித்து வருபவர் மணிமாறன் (39). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் உறவினர் வீட்டின் விசேஷத்திற்காக நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து 10 பவுன் திருடிச் சென்றனர்.இது குறித்து தகவலின் பேரில் மணிமாறன் துறையூர் போலீசாரிடம் புகாரின் அளித்தார்.
திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் காற்றழுத்த குறைபாடு, எந்திரக் கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிரக்கப்பட்டது . தொடர்ந்து 167 பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 மணி நேரத்தில் மாற்று விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 0 மி.மீட்டர், விமான நிலையம் 33 மி. மீட்டர்,திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 18 மி.மீட்டர், டவுன் 10 மி. மீட்டர்,ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 0 மி.மீ, என திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 106.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 4.43 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருச்சியில் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துறையூா், முசிறி,தொட்டியம், தா.பேட்டை, மண்ணச்சநல்லூா், திருவெறும்பூா், அந்தநல்லூா் ஆகிய 7 ஒன்றியங்களில் நேற்றுவரை சுமாா் 420 ஏக்கா் வரையிலான வாழைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
திருச்சியில் இன்று காமராஜபுரம் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த சுதா, அவரது மகள் யமுனா, மற்றொரு சிறுமி மணிகண்டன் மகள் பிருந்தா ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கடித்தது. இந்நிலையில்,
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.
மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் சதீஷ் குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் இன்று சமூகநீதி மாணவர் இயக்கம் திருச்சி மண்டலம் சார்பில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி) என்கிற தலைப்பில் மாணவர்களுக்கான நான்கு நாள் நல்லொழுக்க முகாம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் அப்பீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், காரைக்குடியில் என்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வரும் 19ம் தேதி 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்த காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வாண்டி என்: 16849), ராமேஸ்வரத்தில் இருந்துமதியம் 2.35 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (16850) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.