India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால் முன்னேற்பாடாக புத்தகங்கள் சரிபார்ப்பு தொட்டிகள், கழிவறைகள் சுத்தம் செய்வது, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின் பேரில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை வட்டம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 10.6.2024 முதல் 13.7.2024 வரை காலை 7:30 மணி முதல் இரவு 10 மணி வரை சிவகங்கை குரூப் யூனிட்
பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதனால்,அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
திருச்சி மெக்கானிக் ஷாப்பில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக,
நேற்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 குழந்தைத் தொழிலாளர்கள் அங்கு ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்ட அதிகாரிகள் இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10.06.2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை நேரடியாக வந்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த 26.5.2024ம் தேதி பிராட்டியூரில் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் ரவுடி முத்துராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் ரவுடி முத்துராமன் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும்,1 கொலை வழக்கும், 2 திருட்டு வழக்கு உட்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.
திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் இன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருச்சி மாநகரில் சமீபகாலமாக கொள்ளை, திருட்டு,வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ச்சியாக இருந்து வந்தது.இந்நிலையில், இன்று பல்வேறு கொள்ளை,திருட்டு,வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய 14 பேரை ஒரே நாளில் திருச்சி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து நகை,பணம், செல்போன்கள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பல குற்றவாளிகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் இந்த தேர்வுப் பணிகளுக்கு என 301 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுப் பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 100 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்.பி.ஏ முதுகலை தொழில் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு வரும் 11ம் தேதி காலை 10.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் நுழைவுச்சீட்டினை பல்கலைக்கழக வளாகத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு தேர்வு தகவல் ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் 09.06.2024 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர், குடிமை பணிகளுக்கான தேர்வு தொகுதி-IV தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.