India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் ஸ்ரீ மாரியம்மன் பெரியசாமி பாலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜையில் பெண்கள் தேங்காய், வாழைப்பழம், மா, பூ உள்ளிட்டவை எடுத்து வந்து படைத்து வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாட்டினை குறிஞ்சி நகர் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சியில் கடந்த 29.5.2024ம் தேதி பெரிய மிளகுபாறை பகுதியில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த ஜாபர் அலி மற்றும் 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ஜாபர் அலி மீது 4 திருட்டு வழக்கு, பாலக்கரை,உறையூர், தில்லைநகர் காவல் நிலையங்களில் 1 வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், இவரை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டத்திற்கு 2024- 2025ம் ஆண்டிற்காக சிறுபான்மை இன மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் கழகம் மூலம் ரூ.2.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சியில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உடனே அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு
வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சியபனைகள்,
கருத்துரைகள் இருந்தால் பொதுமக்கள் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மதிப்பீட்டு துணை குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 14 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே ,இந்த முகாமில் திருச்சி மாவட்டத்தில் வேலை தேடுவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 9 க்கு உட்பட்ட உறையூர் மேட்டுத் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியை இன்று(ஜூன் 11) மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியின் தூய்மை குறித்தும், கழிவறைகளின் சுத்தம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் படி உத்தரவிட்டார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 9க்கு உட்பட்ட உறையூர் மேட்டு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியினை இன்று(ஜூன் 11) மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியின் தூய்மை குறித்தும், கழிவறைகளின் சுத்தம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டம் தெற்கு திமுக மாவட்ட கழக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ஆதி திராவிட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று காலை திருச்சி ஆட்சியரகம் முன்பாக மக்கள் உரிமை கூட்டணியின் சார்பில்
மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 10 குளங்களை காவேரி ஆற்று தண்ணீரை கொண்டு நிரப்பி நீர்நிலைகளை பாதுகாக்க கோரி அந்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பேரவை, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 50,655 கிலோ தூசி மற்றும் வண்டல் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25 தினத்திலிருந்து ஜூன் 9 வரை மொத்தம் 42.5 கிலோமீட்டர் கால்வாய் தூர்வாரும் பணியும், ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று(ஜூன் 11) 12 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.