India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று திருச்சி மாநகர பகுதியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 98 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார். மேலும் உரிமையாளர்களிடம் பாதுகாப்பாகவும், வெளியில் செல்லும்போது கவனத்துடன் இருக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 25ம் தேதி திருச்சி மண்டல அளவிலான வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால்,
வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை வருகிற 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு 0431- 2419523 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் தி. நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஓயாமரி சுடுகாடு பாலத்தின் நடுவே இன்று (ஜூன் 12) அதிகாலை 4 மணி அளவில் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் லால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும்
15-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இதில், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ
நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் வரும் 21-ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய உதவி குழு பயிற்சி, மானியத் தொகை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் திருச்சியை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வரும் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் முசிறி வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருச்சி மேற்கு வட்டத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 11) மதியம் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் முதல் விமானம் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளும், ஊழியர்களும் உடன் இருந்தனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்க இருக்கும் கே.என். அருண் நேரு இன்று (ஜூன் 12) காலை சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அவர் வாழ்த்து பெற்றார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜூன் 14ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் படித்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
சர்வதேச குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி தென்னக ரயில்வே மண்டல பயிற்சி மையத்தில் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணியிலும் ஈடுபடுத்த மாட்டோம் என 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.