India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் பொதுமக்களுக்கு இன்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டம் முசிறி இன்று வருகை தந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேருக்கு ஒன்றிய செயலாளர் சிறப்பான வரவேற்பு அளித்தார். தொட்டியம் ஒன்றியம் பகுதி காட்டுப்புத்தூர் பகுதி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அருன் நேரு எம்பியை ஒன்றிய செயலாளர் திருஞானம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ் வரவேற்பு அளித்தனர்
திருச்சி சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை, கன்னுக்குடிப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இன்று வளம்பகுடி பகுதியில் விபத்து நடைபெற்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. இதில் திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி மத்திய மண்டல அதிகாரிகளுக்கான பிஸ்டல், ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி ஐஜி கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் ரைபில் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு திருச்சி ஐஜி பரிசு வழங்கினார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை, பொறியியல் படிப்புகள் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக மணப்பாறையில் ரூபாய் 14.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 20ஆம் தேதி காலை 11 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.