India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் வீட்டை சோதனையிட்டதில் அங்கு 2.9 கிலோ யானைத் தந்தம், புள்ளி மானின் தோல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதரையும், இவருக்கு உடந்தையாக வெங்கடசுப்பிரமணியன் பாண்டுரங்கன் முரளி ஆகியோரையும் கைது செய்து யானைத் தந்தம், மான் தோல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி அருகே உப்பிலியபுரம் பகுதியில் கடந்த 27.11.2021ம் தேதி பிரபு என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார்.இந்த வழக்கின் குற்றவாளியை திருச்சி எஸ்பி உத்தரவுபடி, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன் விரோதம் காரணமாக பிரபுவை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 18 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,190 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 19 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜீவானந்தம்.இவர் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து ஏமந்தார். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் ஜோதிடர் என்பதும்,இவர் 5 பேரிடம் ரூ.13 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று மணிகண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ஜான் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டூர் பகுதியில் காளிமுத்து, பாபு ஆகிய 2 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்
திருச்சி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகளின் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது .அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீதாராமன் கலந்து கொண்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் மற்றும் தேர்தல் அலுவலரான சரவணன் முன்னிலையில் நடந்தது. தேர்தலில் கூட்டமைப்பின் தலைவராக தாமோதரன் நியமிக்கப்பட்டார்.
திருச்சி வழியே மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை வரும் 20ம் தேதி தமிழகம் வரும் மோடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக மதுரை பெங்களூர் இடையே வந்தேபாரத் ரயிலும் சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 ரயில்களையும் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்சி மாநகரில் ஆடு பலியிடுவதற்கு மாநகராட்சி சார்பாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.அந்த அனுமதியும் மீறி சட்ட விரோதமாக 100க்கும் அதிகமான இடங்களில் சிலர் பலியிட்டு வருகின்றனர்.எனவே,பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க கோரினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி மனமகிழ் மன்றம் திருச்சி ஆட்சியரின் முழு கட்டுப்பாட்டிற்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அங்கு டென்னிஸ் மைதானத்தின் முழு நிர்வாக பொறுப்புகள், பராமரிப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரின் மேற்பார்வை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகளில் இன்று பேருந்து நிலையம் உள்பகுதி ,வெளிப்பகுதி, அண்ணா சாலை, டோல்கேட் சாலை, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் பூட்டு போட்டும், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.