Tiruchirappalli

News June 12, 2024

திருச்சி விவசாயிகளுக்கு ஆட்சியரின் அறிவிப்பு

image

திருச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க இதற்கான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.

News June 12, 2024

திருச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.!

image

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 15.6.2024ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர் அவர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 12, 2024

திருச்சி அருகே 98 செல்போன்கள் மீட்பு 

image

திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று திருச்சி மாநகர பகுதியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 98 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார். மேலும் உரிமையாளர்களிடம் பாதுகாப்பாகவும், வெளியில் செல்லும்போது கவனத்துடன் இருக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

News June 12, 2024

திருச்சி: தலைமை தபால் நிலையத்தில் வரும் 25ம் தேதி கூட்டம்

image

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 25ம் தேதி திருச்சி மண்டல அளவிலான வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால்,
வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை வருகிற 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு 0431- 2419523 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் தி. நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

திருச்சி அருகே கொளுந்துவிட்டு எரிந்த லாரி

image

திருச்சி ஓயாமரி சுடுகாடு பாலத்தின் நடுவே இன்று (ஜூன் 12) அதிகாலை 4 மணி அளவில் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 12, 2024

திருச்சி: 15ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் லால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும்
15-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இதில், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ
நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News June 12, 2024

திருச்சி: திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் வரும் 21-ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய உதவி குழு பயிற்சி, மானியத் தொகை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் திருச்சியை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 12, 2024

திருச்சி: பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் 

image

திருச்சி மாவட்டத்தில் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வரும் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் முசிறி வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருச்சி மேற்கு வட்டத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News June 12, 2024

திருச்சி: விமான பயணிகள் மகிழ்ச்சி.!

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 11) மதியம் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் முதல் விமானம் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளும், ஊழியர்களும் உடன் இருந்தனர்.

News June 12, 2024

சேகர் பாபுவிடம் வாழ்த்து பெற்ற அருண் நேரு

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்க இருக்கும் கே.என். அருண் நேரு இன்று (ஜூன் 12) காலை சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அவர் வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!