India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஆர் சி பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் சாம்ரோஜ் என்ற மாணவன் நேற்று கொள்ளிடம் ஆற்றில் நண்பர்கள் 5 பேருடன் குளிக்கச் சென்ற போது சாம்ரோஜ் நண்பர்கள் கண் முன்னே நீரில் மூழ்கினார். இதனால் நேற்று முதல் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சாம்ராஜ் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவனது உடலைப் பார்த்து அவனது நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
திருச்சி அருகே கம்பரசம் பேட்டை நீர் பணி நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி இன்று நடைபெற உள்ளது. இதனால் மரக்கடை, விறகுபேட்டை பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை 24ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார்.
சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில். எஸ்.பி. வருண் குமாரின் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவல்துறையைச் சார்ந்த 25 பேரும் உடனடியாக நேற்று மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சி கொள்ளிடம் பகுதியில் இரவு நேரத்தில் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு புகார் அளித்து வந்தனர். ஆனால்,மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க தவறியும், மணல் கடத்தல் கும்பலுக்கு போலீஸார் ஆதரவாக இருப்பதாக, திருச்சி எஸ்பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ன்று கொள்ளிடம் காவல் நிலையத்தை சேர்ந்த 25 போலீசாரை திருச்சி ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, திருச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
திருச்சி மாவட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சுமார் 15 கடைகளுக்கு நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.பிறகு
ரூ.4,75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்,உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது,பேசிய அய்யாகண்ணு கடந்த 20 ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தும் கடைகளை ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அனைத்து மண்டலங்களிலும் 65,200 மொத்த அபராத தொகை பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.அந்த வகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள்,துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்சியில் கள்ள சாராயம் காய்ச்சியதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாவட்ட சுங்கத்துறை ஆணையரகம் சார்பில் நேற்று பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.