Tiruchirappalli

News June 17, 2024

திருச்சி முதல் சென்னை வந்தே பாரத் ரயில்

image

தெற்கு ரயில்வேக்கு திருச்சி மக்கள் மீண்டும் ஒரு கோரிக்கையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் தனியாக இயக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்க திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் அது திருச்சி, சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

News June 17, 2024

திருச்சி: காவல்துறையை கண்டித்து சாலை மறியல்

image

துவாக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி மணிகண்டனை சஞ்சய் சுமன் உள்ளிட்ட 3 பேர் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் உறவினர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News June 17, 2024

ஸ்ரீரங்கத்தில் நான்கு பேர் கைது!

image

திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் வீட்டை சோதனையிட்டதில் அங்கு 2.9 கிலோ யானைத் தந்தம், புள்ளி மானின் தோல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதரையும், இவருக்கு உடந்தையாக வெங்கடசுப்பிரமணியன் பாண்டுரங்கன் முரளி ஆகியோரையும் கைது செய்து யானைத் தந்தம், மான் தோல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News June 16, 2024

திருச்சி அருகே 3 வருடம் கழித்து குற்றவாளி கைது

image

திருச்சி அருகே உப்பிலியபுரம் பகுதியில் கடந்த 27.11.2021ம் தேதி பிரபு என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார்.இந்த வழக்கின் குற்றவாளியை திருச்சி எஸ்பி உத்தரவுபடி, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன் விரோதம் காரணமாக பிரபுவை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்

News June 16, 2024

திருச்சியில் இவ்வளவு தூசி அகற்றமா..!

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 18 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,190 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 19 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News June 16, 2024

திருச்சி: 5 பேரிடம் பணத்தை ஏமாற்றிய ஜோதிடர் கைது

image

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜீவானந்தம்.இவர் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து ஏமந்தார். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் ஜோதிடர் என்பதும்,இவர் 5 பேரிடம் ரூ.13 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று மணிகண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

News June 16, 2024

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

image

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ஜான் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காட்டூர் பகுதியில் காளிமுத்து, பாபு ஆகிய 2 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்

News June 16, 2024

மாநகராட்சி அங்க புதிய அலுவலர்கள் தேர்வு

image

திருச்சி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகளின் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது .அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீதாராமன் கலந்து கொண்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் மற்றும் தேர்தல் அலுவலரான சரவணன் முன்னிலையில் நடந்தது. தேர்தலில் கூட்டமைப்பின் தலைவராக தாமோதரன் நியமிக்கப்பட்டார்.

News June 15, 2024

திருச்சி வழியே மேலும் ஒரு ரயில் 

image

திருச்சி வழியே மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை வரும் 20ம் தேதி தமிழகம் வரும் மோடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக மதுரை பெங்களூர் இடையே வந்தேபாரத் ரயிலும் சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக இன்று தகவல்  வெளியாகியுள்ளது. இந்த 2 ரயில்களையும் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 15, 2024

திருச்சியைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு

image

திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்சி மாநகரில் ஆடு பலியிடுவதற்கு மாநகராட்சி சார்பாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.அந்த அனுமதியும் மீறி சட்ட விரோதமாக 100க்கும் அதிகமான இடங்களில் சிலர் பலியிட்டு வருகின்றனர்.எனவே,பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க கோரினார்.

error: Content is protected !!