India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் விறகுபேட்டை மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, மரக்கடை பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்த்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பெருட்கள் விற்பனை செய்த 56 கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.16.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது, வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்” பணியாற்றும் தன்னார்வலர்கள் மனு அளித்தனர். அதில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” நிறுத்தக்கூடாது. அதனை தொடர்ந்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது என இன்று(ஜூன் 27) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் கோவையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 958 மனுக்கள் வந்தது. அதில் 876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 82 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சலாம் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன்,
துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சந்தோஷ் உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மூக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தப்படும் என சிலரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அதில் ஆர்.கே சுரேஷின் பெயரும் இருந்தது. இந்நிலையில், இதற்கு ஆர்.கே.சுரேஷ், நான் பாஜகவில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதை மாப்பிள்ளை திருச்சி சூர்யாவுக்கு கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.