Tiruchirappalli

News June 22, 2024

திருச்சி அருகே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

image

திருச்சி மாவட்ட சுங்கத்துறை ஆணையரகம் சார்பில் நேற்று பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

News June 21, 2024

வாக்குறுதி நிறைவேற்ற முடியாததால் கவுன்சிலர் ராஜினாமா

image

திருச்சி: காட்டுப்புத்தூர் பேரூராட்சி 10வது வார்டு ஐஜேகே கவுன்சிலர் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாததால் இன்று பதவியை ராஜினாமா செய்தார். இவர் தேர்தலின் போது சமுதாயக்கூடம், சாக்கடை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பொது மக்களுக்கு பல்வேறு பணிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதனை செய்து தர முடியாததால் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீதி-யிடம் அலுவலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

News June 21, 2024

விவசாயிகளுக்கு ஆட்சியரின் ஒரு அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் தெளிப்பு நீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மூன்று ஆண்டுகளில் நுண்ணீர் பாசன மானியம் பெறலாம் என திருச்சி  ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைத்தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 21, 2024

திருச்சி கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்த பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையில் ஸ்பிரிட் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

திருச்சி ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவமனைகளில் ஸ்பிரிட் என்ற ஆல்கஹால் பானத்தை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மருத்துவமனை மூடப்படும். மேலும், ஸ்பிரிட் இருப்பு விபரங்களை அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

News June 21, 2024

திருச்சி:38 கடைகளுக்கு சீல்; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 13 காவல் நிலையங்களில் பெறப்பட்ட 72 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் 38 கடைகளுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News June 21, 2024

விருது பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்களை தேர்வு செய்து விருது பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கhttps://awards. tn. gov. in என்ற தளத்தில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் வரும் ஜூலை மாதம் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி சம்பவம்: திருச்சி எம்எல்ஏ அறிக்கை

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிக துரிதமான முறையில் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நடந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து மிக வேகமாக முதல்வர் தலைமையிலான அரசு செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

திருச்சியின் தூய்மை பணி தகவல்.!

image

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 32 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 49,490கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 14 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

News June 20, 2024

திருச்சியில் 2 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சி அரியமங்கலத்தில் கடந்த 30.4.2024ம் தேதி ரவுடி முத்துக்குமார் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதில் ரவுடி தங்கமணி மற்றும் ரவுடி தினேஷ் ஆகியோர் மீது திருச்சி காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால், இவர்கள் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!