Tiruchirappalli

News July 10, 2024

இந்திய விமானப்படையில் சேர ஆட்சியர் அழைப்பு

image

அக்னி பாத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் வாயுவாக இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 550 மட்டுமே.விண்ணப்பதாரர்கள் 3.7.2004 அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

திருச்சி மாணவர்களுக்கான இணையவழி தேர்வு

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடம் சம்பந்தமான வினாடி வினா தேர்வினை இணையவழி வாயிலாக நடைபெற்று வருகிறது. இன்று திருச்சி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா தேர்வு நடந்தது. தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு பள்ளி பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.

News July 10, 2024

பராமரிப்பு பணிகளால் தாமதமாக இயக்கப்படும் ரயில்

image

திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் நேற்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை புறப்படும் திருச்சி – காரைக்குடி டெமு ரயில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள் வரும் 17 ஆம் தேதி மொகரம் பண்டிகை தவிர அனைத்து நாட்களும் 4.15 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News July 9, 2024

இருசக்கர வாகனம் வாங்க மானியம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு 2 சக்கர வாகனம் வாங்க அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பயன் பெற்று வாகனம் வாங்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணி புரிகிறார் என்பதற்கான சான்றை பெற்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News July 9, 2024

திருச்சி:மானியம் பெற அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. எனவே இதற்கான விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.

News July 9, 2024

திருவெறும்பூரில் அமைச்சர்கள் ஆய்வு

image

திருவெறும்பூர் வட்டம், சூரியூர் மற்றும் இலந்தைப்பட்டி கிராமத்தில் சிப்காட் அமைய உள்ள இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 9, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் ஜூலை.19 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படைவீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 17ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

News July 8, 2024

திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணி

image

திருச்சியில் இன்று பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பேரணிக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ நேரில் ஆதரவு தெரிவித்தார். இதில், “மூன்று குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது; சட்ட நிபுணர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட குழு அமைத்து சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.

News July 8, 2024

திருச்சி: இசைப்பள்ளியில் சேர அழைப்பு

image

திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் 12-ஆம் தேதி துவங்க உள்ளன. இதில், பாரம்பரிய கலைகள் தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8 ஆம் வகுப்ப தேர்ச்சி பெற்ற 17 வயதை கடந்தோர் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளோர் திருச்சியில் உள்ள இசைப்பள்ளியில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாமென ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!