India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பாராளுமன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் அருணாச்சல மன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட அனைத்து தேசிய, மாநில நிர்வாகிகள், அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கூறப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 897 மனுக்கள் வருகை தந்தது. அதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 01 – 10,805 கிலோ, மண்டலம் 02 – 4,550 கிலோ, மண்டலம் 03 – 7,500 கிலோ, மண்டலம் 04 – 9,100 கிலோ மற்றும் மண்டலம் 05 – 9,640 கிலோ என மொத்தம் = 41595 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. மேலும் திருச்சியை சுற்றி 19 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கம்பரசம்பேட்டை அருகே காவிரிக் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி மாநகரின் பறவைகள் பூங்கா மற்றும் பறவைக் கூடத்தின் 85 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் பறவைகள் பூங்காவை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் எம்.பிரதீப்குமார் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த பறவைகள் பூங்கா 60,000 சதுர அடி மற்றும் 70 அடி உயரம் கொண்ட தளம் கொண்டது.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு SRMU ரயில்வே தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டியளித்தார். அதில், ரயில்வேயில் சில துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் நடக்கிறது. இதனால் ரயில்வே தொழிலாளர்களின் பணி இழப்பு மட்டும் இன்றி, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.எனவே ஒன்றிய அரசு தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்றார்.
பெருந்தலைவர் காமராஜர் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை இன்று அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் இன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் – திருச்சி அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு திருச்சி அணி, 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இதனால் திருச்சி சோழாஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
திருச்சி-அபுதாபி இடையே வாரநாள்களில் 4 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இயக்கப்படும் விமான சேவை, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.