India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2024ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சி துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது 0431-2401031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சி நவல்பட்டு மற்றும் கொணலை பகுதிகளில் இன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர் முகாம்”களில்பொதுமக்களிடமிருந்து 1384 மனுக்கள் பெறப்பட்டது.மேலும் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மனு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலகத்திற்கு சொந்தமான கழிவு செய்யப்பட்ட ஈப்புகளை வரும் 16ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர முன்வருவோர் மேற்கூறிய தேதியில் நேரில் ஆஜராகி ஏலம் கேட்கவும்.ஏலம் கோரியவர்கள் தங்களது சொந்த செலவில் வாகன ஆவணங்களை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்
திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி என்கிற துரை. இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ள நிலையில்,ஒரு வழக்கில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில், இன்று புதுக்கோட்டை காட்டுப்பகுதியில் ரவுடி துரையை பிடிக்க சென்ற போலீசாரை துரை தாக்கியதால் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி துரையால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமைச்சர் நேரு நேற்று பேஸ்புக் பக்கத்தில் லால்குடி நகராட்சியில் நலத்திட்ட உதவி வழங்கிய படங்களை பதிவிட்டார்.அமைச்சர் பதிவிட்ட பேஸ்புக் பதிவின் கமெண்ட் பகுதியில் லால்குடி எம்எல்ஏ சவுந்திர பாண்டியன் அமைச்சரிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் குறித்து கோரியிருந்ததை பதிவிட்டார்.சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பேஸ்புக் பக்கத்தின் கமெண்டில் தான் இறந்ததாக பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறிவைத்து தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
துறையூர் அடுத்த சின்ன இலுப்பூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி ரோகிணி, ஜேஇஇ தேர்வில் 73.8% பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் காரணமாக அவருக்கு திருச்சி என்ஐடிஇல் இடம் கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாணவி ரோகிணியை பாராட்டி, பெரம்பலூர் எம்பி அருண்நேரு மடிக்கணினி வழங்கினர். இதில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-1 பதவிக்கான போட்டித் தேர்வு வரும் 13/7/2024 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. திருச்சியில் 31 தேர்வு மையங்களில் 9,960 நபர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிகளுக்கு 31 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 இயங்கு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகையை தொடர்ந்து அவதூறு பரப்பும் பாஜக தமிழ்நாட்டின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு நாளை (11-07-2024) காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அக்னி பாத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் வாயுவாக இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு கட்டணம் ரூபாய் 550 மட்டுமே.விண்ணப்பதாரர்கள் 3.7.2004 அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.