India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. இதில் திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி மத்திய மண்டல அதிகாரிகளுக்கான பிஸ்டல், ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருச்சி ஐஜி கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் ரைபில் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு திருச்சி ஐஜி பரிசு வழங்கினார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை, பொறியியல் படிப்புகள் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக மணப்பாறையில் ரூபாய் 14.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 20ஆம் தேதி காலை 11 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
அக்னிபாத்திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆள் சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் திருச்சியை சேர்ந்த அனுஷ்கா-ஹிரித்திக் ஜோடி சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 8.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக 0.37 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 2 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஜூலை 19ஆம் தேதியன்று திருச்சி பாராளுமன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் அருணாச்சல மன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட அனைத்து தேசிய, மாநில நிர்வாகிகள், அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கூறப்பட்டுள்ளது.
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் தந்தை செல்வராஜ் இன்று இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் தா பேட்டையில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Sorry, no posts matched your criteria.