Tiruchirappalli

News July 23, 2024

தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் பொன்மலை கோட்டத்தில் 94 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி தேதியாகும். https://rrccr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க..

News July 23, 2024

பொது சுகாதாரத்துறையில் வேலை இருக்கு

image

திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம், இணை இயக்குநர் நலப்பணிகள், முதல்வர் அரசு தலைமை மருத்துவமனை, மாநகர் நல அலுவலர் திருச்சி மாநகராட்சி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளில் இருக்கும் 36 காலிப்பணியிடங்களில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. https://tiruchirappalli.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஜூலை 31 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

News July 23, 2024

TNPL:சேப்பாக் அணி அபார வெற்றி

image

TNPLல் நேற்று நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது சேப்பாக் அணி. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருச்சி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக ஆடிய 26 ரன்கள் குவித்ததுடன் 1 விக்கெட் கைப்பற்றிய அபிஷேக் தன்வார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

News July 22, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

குழந்தைக்கு நடைவண்டி வழங்கிய ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1360 ரூபாய் மதிப்பிலான மாற்றுத்திறனாளி குழந்தைக்கு நடந்து செல்லும் வகையில் நடை வண்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

பொதுமக்கள் இடமிருந்து குவிந்த 937 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 937 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 22, 2024

ஒரே நாளில் 66 நாய்கள் பிடிப்பு

image

திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இன்று சாலையில் சுற்றி திரிந்த 66 நாய்கள் பிடிக்கப்பட்டது.பின்பு நாய்கள் கருத்தடை மையத்தில் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஆணையரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

News July 22, 2024

உத்தரவு போட்ட கமிஷனர்- ஆய்வு செய்த ஆய்வாளர்கள்

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி, இன்று திருச்சி அம்மன் நகர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும், தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனரா எனவும் ஆய்வு செய்தனர்.

News July 22, 2024

சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

image

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள மத்திய சிறை உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் என்பவர் இன்று ஜன்னல் கம்பியை வளைத்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News July 22, 2024

குழந்தைகளுக்கு காதொலி கருவிகளை வழங்கிய ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூபாய் 27 ஆயிரத்து 800ரூபாய் மதிப்பிலான காதொலி கருவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!