India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
துறையூர் அடுத்துள்ள காஞ்சிரி மலைப் புதூர் பகுதியில் வசிப்பவர் சுரேஷ். இவருக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று சுரேஷின் தந்தை மாணிக்கம் குழந்தைகளுக்கு குளிர்பானம் வாங்கி வந்துள்ளார். குழந்தைகள் குளிர்பானம் என்று நினைத்து வீட்டில், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்ததால் 2 வயது குழந்தை வினிஸ் சம்பவ இடத்திலேயே மயங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் பரிசல், துறையூர் ரோடு, அக்ரஹாரம் மற்றும் உமையாள்புரம், செவந்தலிங்கபுரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மேலே கூறப்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளிக்கவும், இறங்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் பரிசல், துறையூர் ரோடு, அக்ரஹாரம் மற்றும் உமையாள்புரம், செவந்தலிங்கபுரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மேலே கூறப்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளிக்கவும், இறங்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 1024 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் திருச்சி முக்கொம்பு மேலனை பகுதியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நீர் வெளியேற்றம் குறித்தும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையில் 240 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியதாக ஸ்ரீநாத், செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் குட்கா பொருட்களை திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக விற்பனை செய்கிறோம் என ஒப்புக்கொண்டனர். இதனால் அவரின் நடவடிக்கையை தடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் இன்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் நீராடுவதற்கான வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின்போது, நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பதாகை வைக்கவும், பொது மக்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே இன்று மாலை ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், வெளியாட்களை அழைத்து வந்து மாணவனை வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமாருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கரை சந்திக்க இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மற்றும் சி.வி சண்முகம் இன்று வருகை புரிந்தனர். அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் எம்பி குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.