India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை நேற்று இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது. இதுபோல், மதுரையைச் சேர்ந்த அஜ்மல்அம்சா என்பவர் தாய், தந்தை பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்தின் தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. ஒரு தேசியக் கொடி ரூ.25 விற்பனை செய்யப்படுகிறது. இதை https://www.cpostolics.gov.in இணையதளம் மூலம் வீட்டிலே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதும், அந்த நாளில் விருது வழங்குவதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் பெரியார் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளி ஒன்றில் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.