India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலா விருதுக்காண விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் 2023-2024ஆம் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுபடுவதாகவும், தாங்கள் www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சி குறிச்சி ஊராட்சியில் உள்ள இ-சேவை மையத்தில் இன்று, பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டின் மருத்துவ துறையின் மிக உயரிய விருதாகிய தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது – 2024 திருச்சியை சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் ராஜேந்திரனுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் இன்று விருது வழங்கப்பட்டது. சிறுநீரக அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கும் நுட்பவியல் துறையில் 17 ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவை அளித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டிற்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், சேர்க்கை மேற்கொள்ள ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து இன்று காலை நிபந்தனை பிணையின் பேரில் விடுவிக்கப்பட்டார். பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, அவர் நடத்தி வரும் ‘யூ டியூப்’ சேனலை மூடும்படி உத்திரவிட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் படிப்படியாக அவர்கள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு பணி அமர்த்தப்பட்டனர். அந்தவகையில் திருச்சி புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி சரகத்தில் 47 காவல் அதிகாரிகளை திருச்சி மண்டலத்தில் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தேரோடும் வீதிகளில் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் கடைகளின் உரிமையாளர்களை அழைத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, SEED திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.
திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் 5 பேர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட், ஏர்போர்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் ந.காமினி நேற்று இரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை, இதர சான்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 805 மனுக்கள் பெறப்பட்டன.
Sorry, no posts matched your criteria.