India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடைவீதி பகுதிக்கு சென்றார். அப்போது, ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த குருபரன் (20) தனது இரு சக்கர வாகனத்தை முன்னாள் சென்ற பாஸ்கர் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் வருகிற 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிலை வைக்கப்படும் இடம் தனியார் அல்லது மாநகராட்சி அல்லது அரசாங்க இடமாக இருந்தால் உரிய அனுமதி கடிதம் பெற்று வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் அமைந்துள்ள தேசிய பள்ளி மைதானத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06037) வேளாங்கண்ணிக்கு 01-09-2024 (ஞாயிற்றுக்கிழமை) 23:50-க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயணிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் 2 ஆம் தேதி இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்வதால் பயணிகள் அவதியடைவார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்து 3 ஆயிரத்து 177 வாக்காளர்கள் உள்ளனர். 2,547 வாக்குச்சாவடிகளும், 1,155 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ, பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ, கட்டடம் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உரிய விண்ணப்பம் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
திருச்சி என்ஐடியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக என்ஐடி நிர்வாகம் தற்போது வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளது. இதில் என்ஐடி நிர்வாகம், இனி இப்படி ஒரு சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு அதிகாரிகள் பணிசெய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்றும், மேலும் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். கமெண்ட் பண்ணுங்க
திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “போராட்டம் நடத்திய மாணவர்களின் கோரிக்கைள் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களும் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துரைத்தனர். உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எஸ்.பி. தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.