Tiruchirappalli

News August 8, 2024

திருவானைக்கோவிலில் வேலைவாய்ப்பு

image

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

திருச்சியில் பள்ளி மாணவன் பலி

image

திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளி ஒன்றில் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

News August 8, 2024

திருச்சியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதும், அந்த நாளில் விருது வழங்குவதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் பெரியார் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

News August 8, 2024

திருச்சி சிறப்பு முகாமில் போலீசார் திடீர் சோதனை

image

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

திருச்சியில் த.வெ.க முதல் மாநாடா?

image

தமிழக வெற்றி கழக முதல் அரசியல் மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதி இடத்தை வாடகைக்கு விடக்கூறி ரயில்வே நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருந்தனர். தற்போது, ஜி கார்னர் மைதானத்தை அளவிடும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 8, 2024

திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

image

தொட்டியம் அருகே உள்ள நாச்சிபுத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் இயற்கை உபாதியை கழிக்க சென்றுள்ளார். அப்பொழுது மின் கம்பத்தின் எர்த் கம்பி தரையில் கிடந்ததை மிதித்ததால் முத்துக்குமார் திடீரென்று தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 8, 2024

திருச்சி எம்எல்ஏவின் நெகிழ்ச்சி செயல்

image

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது மாதச் சம்பளம் முழுவதையும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு வழங்கினார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் படிப்புக்கு தேவையான முழு கட்டண தொகையையும் நேற்று வழங்கினார். இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும்

News August 8, 2024

திருச்சி ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

News August 7, 2024

திருச்சியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள்

image

திருச்சி மாநகராட்சியில் இன்று மண்டலம் 01 – 07 நாய்கள், மண்டலம் 04 – 06 நாய்கள் மற்றும் மண்டலம் 05 – 12 நாய்கள், மொத்தம் – 25 நாய்கள் பிடிக்கப்பட்டு, நாய்கள் கருத்தடை மையத்தில் கால்நடை மருத்துவக் குழு மூலம் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாநகராட்சி முழுவதும் மொத்தம் 21 கிலோமீட்டர் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

News August 7, 2024

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர் பலி

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தற்போது அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் முத்தரசநல்லூர் பகுதியில் கூடலூர் ரெங்க நகர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்று தெரிய வந்துள்ளது. போலீசார் பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!