India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில்வே நிர்வாகம் கியூ. ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. திருச்சி, தஞ்சை உள்பட 94 முக்கிய ரயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி முன்பதிவு இல்லா டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இதன்படி தாசில்தார்கள் லோகநாதன் , அருள்ஜோதி, சேக்கிழார் , சக்திவேல் முருகன், தனலெட்சுமி , செல்வ சுந்திரி, தமிழ்க்கனி, ராஜேஸ் கண்ணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் என்பவர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பிய நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.பி மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். அதற்கு ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நான் பேசினேன், வேறு எதுவும் எனக்குத் தெரியாது என சீமான் பதில் கடிதத்தை தாக்கல் செய்துள்ளார்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் போன்ற அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களைக் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் புகார்கள் அளிக்க பாதுகாப்பு பெட்டி வைக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 137 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் தென்னூர், சிறுகனூர், மேட்டுப்பட்டி, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி, தஞ்சை சாலை, தென்னூர், கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைக்காட்டி, தொட்டியப்பட்டி, அண்ணாமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.08.2024ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைதுறை,விற்பனைதுறை போன்ற பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே திருச்சியைச் சேர்ந்த வேலை நாடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட்.20 காலை 11 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் சிறப்பு வாக்காளர் சுருக்க முறை திருத்தம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை ஆட்சியர் ஆய்வு செய்ய உள்ளார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நாளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று அறிவித்துள்ளார். இதில் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு நாட்கள் இந்த தகுதி தேர்வு நடைபெற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளையின் சிறப்பு தொழிற் கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.