Tiruchirappalli

News September 3, 2024

திருச்சி மாவட்டத்தில் மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் புத்தாநத்தம், சமயபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.4) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேனூர், வெங்கக்குட, மருதூர், மணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், திருப்பத்தூர், பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News September 3, 2024

அண்ணன், தம்பி பிரச்சனை – அமைச்சர் பேச்சு.!

image

திருச்சி ஏர்போர்ட்டில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது,  திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கும் பிரச்னை போன்றது தான். குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்னை போல தான். அவற்றையெல்லாம் நாங்கள் சரி செய்து விடுவோம்” என தெரிவித்தார்.

News September 3, 2024

800 கிலோ சைனா நூடுல்ஸ் பறிமுதல்

image

அமேசான் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு காரணமாக, சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று விமான நிலையத்தில் தெரிவித்தார்.

News September 3, 2024

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்

image

திருச்சி உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குழந்தைகள் உதவி மையம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மருத்துவர் சாம்சன் மீது போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன்தான் மருத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.

News September 3, 2024

திருச்சி என்ஐடியில் உயர்மட்ட குழு அமைப்பு

image

திருச்சி என்ஐடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள், பாதுகாப்பு குறித்து இக்குழு ஆய்வு செய்கிறது எனவும் என்ஐடி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 3, 2024

நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனத்திற்கு சீல்

image

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசித்த ஜான் ஸ்டெபி ஜாக்லின் அமேசான் மூலம் நூடுல்ஸ் ஆர்டர் செய்து உணவருந்திய பின் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இந்த தகவலை அடுத்து திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் நூடுல்ஸ் சப்ளை செய்த மொத்த வணிக நிறுவனத்தை ஆய்வு செய்து அந்த நிறுவனத்திற்கு நேற்று சீல் வைத்தார்.

News September 3, 2024

திருச்சியில் மாநில அளவிலான போட்டி

image

திருச்சியில் டேக்வாண்டோ அமைப்பின் சார்பாக இன்று ஒருங்கிணைக்கப்பட்ட 35வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் . அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News September 2, 2024

ஊட்டச்சத்து மாதம்: பலூன்களை பறக்க விட்ட ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஊட்டச்சத்தின் அவசியத்தை ஒரு எடுத்துரைக்கும் வகையில் வண்ண பலூன்களை வாங்கி பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிழலில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

பாலியல் தொல்லை எதிரொலி: குழு அமைத்தது திருச்சி என்ஐடி

image

திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவத்தின் எதிரொலியாக, பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை விசாரிக்க, உண்மை கண்டறியும் குழுவை இன்று அமைத்தது என்ஐடி நிர்வாகம். இந்த குழு மாணவிகளை தனித்தனியே சந்தித்து அவர்தம் பிரச்சனைகளை கேட்டறிந்து கல்லூரி நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

News September 2, 2024

ஊட்டச்சத்து மாதம்: பலூன்களை பறக்க விட்ட ஆட்சியர்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஊட்டச்சத்தின் அவசியத்தை ஒரு எடுத்துரைக்கும் வகையில் வண்ண பலூன்களை வாங்கி பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிழலில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!