India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன் தாஸ், மகளிர் அணி தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமயபுரம் அருகே தெற்கு இருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் காவலராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பியபோது கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.30,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 468 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என திருச்சி ரெயில்வே கோட்ட சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மதியழகன் கார் வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார். மதியழகனுக்கும் பாண்டியனுக்கும் வீட்டு விசயத்தில் பிரச்சனை ஏற்பட பாண்டியன் காவல் நிலையம், கலெக்டர் அலுவலகம் என்று பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிப்பு சம்பவத்தில் இறங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திருச்சி கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, பாலக்கரை சேர்ந்த கிரிஜா என்ற இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கைது செய்து நேற்று திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஒருவர் மீது பாலியல் புகார் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. கருத்துக்களை பதிவிடவும்
திருச்சி பத்தாளப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், திருவெறும்பூர் அடுத்த கல்லணை கால்வாயில் நேற்று மகளுடன் குளிக்கச் சென்றார். அப்போது இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடலை போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலூரில் சுரேஷின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியமங்கலம் குப்பை கிடங்கில் 1 நாளைக்கு 100 டன் காய்கறிகள், இறைச்சிகள் மற்றும் இதர கரிம கழிவுகளைக் கொண்டு உயர் அழுத்த இயற்கை எரிவாயு (பயோ சிஎன்ஜி) தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக மத்திய அரசு ஸ்வச் பாரத் மிஷின் 20 திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அக்டோபரில் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கருத்துக்களை பதிவிடவும்
அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முசிறி MIT வேளாண்மை கல்லூரி விழாவிற்கு வருகை தர உள்ளார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கழக நிர்வாகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.