India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
துறையூறை சேர்ந்தவர் சுரேஷ்.இவரும் இவரது மனைவியும் வீட்டிலேயே முறுக்கு,மிச்சர்,இனிப்பு பலகாரம் செய்து சுற்றுப்புற கிராம கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலுக்காக கடன் அதிகமாக சுரேஷ் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு உள்ளனர். இதனால்,கணவன்- மனைவி இருவரும் நேற்று கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டனர். இதில், சுரேஷ் உயிரிழந்தார். இது குறித்து துறையூர் போலீசார் விசாரணை.
திருச்சியில் பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் இவரது கூட்டாளிகளான பாலசுப்பிரமணியன், சமயபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், அருண், ராமு, லட்சுமணன், வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சருவாள்கள் 28 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வாழையில் ஊட்டச்சத்து மேலாண்மை, நிர்வாகம் போன்ற தலைப்புகளின் கீழ் விவசாயிகளுக்கு வரும் 24ஆம் தேதி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள 9171717832 என்ற எண்ணிற்கு கட்டுப்பாட்டு அஞ்சல் மூலம் முன்பதிவு செய்யலாம் என வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சோமரசன்பேட்டையை சேர்ந்த சின்ராசு மற்றும் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் சக்திவேல் என்பவர் சிறையில் இருக்கிறார். அவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் காமினி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் சார்பில், தமிழக முன்னாள் முதல்வரும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படத்துடன் தீபாவளி நல்வாழ்த்துகள் பேனர் தில்லைநகர் மெயின் ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் மர்ம நபர்கள் கருப்பு மை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று நம் பெருமாள் துலாம் மாத புறப்பாடு நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு சாளக்கிராம மாலையுடன் புறப்பட்டார். அவரை கோவில் பட்டர்கள் தோளில் சுமந்து வந்தனர். பின்னர் நம்பெருமாள் சிறப்பு சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட தொட்டியத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி கேடன்ஸ் மார்சியா 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து யுனிகோ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை படைத்தார். அந்த சிறுமிக்கு தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு பழுதாகி, 8 மணி நேரமாக ஓடுதளத்தில் நின்ற, சார்ஜா செல்லக்கூடிய விமானத்திற்கு மாற்றாக, திருவனந்தபுரத்திலிருந்து இன்று அதிகாலை, 2.50 மணிக்கு விமானம் வந்தது. இதன் மூலமாக, 155 பயணிகள் இன்று அதிகாலை, 3 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.