India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,திருச்சி மாநகர், துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.
திருச்சி, வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி கிராமம், மணப்பாறை சத்திரப்பட்டி மற்றும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. எனவே புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குறித்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறாக பேசிய வழக்கில் தில்லைநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை தில்லை நகர் காவல் நிலையத்திலிருந்து, திருச்சி சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 411 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொழில்நுட்ப பணிகள் தேர்வானது வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை திருச்சியில் 14 தேர்வு மையங்களில் 4198 தேர்வுகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிகளுக்கென 14 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி, சிறுகனூர் அருகே எம் ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி (48) வயலுக்குச் நாத்து நடவு சென்ற போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் உடலை கைப்பற்றிய போலீசார் பின்னர் பிரசோத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திருச்சி விமான நிலையம் சனிக்கிழமை வந்தடைந்தன. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்தபோது புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன், நாகப்பட்டினத்தை சேர்ந்த அம்மாசி, புத்தாநத்தத்தை சேர்ந்த உபயத்துல்லா ஆகிய 3 பேரின் ஆவணங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 3 பேரையும் விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல நாளை மாலை வருகை தர உள்ளதால், பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் முதலமைச்சர் பயணம் செல்லும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று 29 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணம் செய்த ஜோடிகளுக்கு சீர்வரிசை கட்டில், மெத்தை, பீரோ வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் எம்பி அருண் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரங்குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் ஸ்டாலின் குமார், தலைவர் சரவணன், கோவில் பணியாளர்கள் செய்தனர்.
திருவானைக்காவல் அடுத்த வெள்ளிக்கிழமை சாலை பகுதியை சேர்ந்த மோகனும், அவரது சகோதரரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரைப் பற்றி தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு இருந்தனர். இதனை தட்டிக் கேட்ட மோகன் மற்றும் அவரது சகோதரரை, 3 வாலிபர்களும் சேர்ந்து அரிவாளால் தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.