India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகின்ற நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 16 ஆவது வார்டு எம்ஜிஆர் நகர் மக்கள் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி தேர்வு நடந்தது. இந்நிலையில் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இன்று (27.11.2024) நடைபெற இருந்த முதல் பருவத்திற்கான சிறப்பு தேர்வு மற்றும் துணைத் தேர்வு பருவ மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
முத்துப்பேட்டையை சேர்ந்த இலக்கியதாஸ் (31), இவர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று ஆன்லைன் பொருட்களை சப்ளை செய்யும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த 6ஆம் வகுப்பு மாணவியிடம் இலக்கியதாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
அதிராம்பட்டினம் அருகே நடந்த விபத்தில் முத்துப்பேட்டை பகுதியிலிருந்து டெம்போ வாகனத்தில் சென்ற ஒரு பெண் பலியானார். 40 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இன்று அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கனமழை எதிரொலியால் திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (நவ.27) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலை., இளநிலை, முதுநிலை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுக்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இத்தகவலை கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அறியும் வண்ணம் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடுமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் வாரிசுகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.