India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் நண்பர்கள் மற்றும் மடப்புரம் கிரிக்கெட் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி திருவிழா வரும் 17.09.24 திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும், என மடப்புரம் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் செப். 16, 26 தேதியன்று வேலுடையார் பள்ளியிலும், செப். 19, 27 தேதிகளில் மன்னார்குடி பின்லே பள்ளியிலும் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ 19 கோடியே 23 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1963 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற தேர்வில் 9213 பேர் மட்டுமே எழுதினர். 2781 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் குருப்-2 தேர்வு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட 28 தேர்வு மையங்களில் இன்று (14.09.2024) நடைபெற்று வருகிறது. இத்தேர்வினை எழுத 11,994 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்றைய தினம் நடைபெற்ற தேர்வில் 9,213 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மையங்களில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.14) தேதி மட்டன் தனிக்கறி ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் தனி கறி ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நன்னிலம் அருகே ஆலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழி–லாளி. மணிகண்டன் மகளிர் குழுவில் மனைவியின் பெயரில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டையில் இன்று மாலை நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் முன்னிட்டு திருச்சி ஐ.ஜி கார்த்திகேயன் தலைமையில் திருச்சி டி.ஐ.ஜி, தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த எஸ்பி-கள், 12 ஏடிஎஸ்பி, 41 டிஎஸ்பிகள், உட்பட 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 20.09.2024, காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
சென்னை டூ திருத்துறைப்பூண்டி வண்டி எண் 06103/06104 தாம்பரம் இருந்து ராமநாதபுரம் தற்பொழுது வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரயில் வரும் 19/09/2024 வாரம் மும்முறை இயக்கப்பட]உள்ளது. அதன்படி திங்கள், வியாழன் மற்றும் சனி தாம்பரத்திலிருந்து மறுமார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு வழியாக விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை திருத்துறைப்பூண்டி வரை இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.