India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க உள்ளார்.
திருவாரூர் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்
சாரு ஸ்ரீ தீபாவளி விற்பனையாக ரூ.36 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கூறியதாவது 11 மாத சேமிப்பு சந்தா தொகை செலுத்தினால் 12 ஆவது மாத சந்தா தொகையை கோஆப்டெக்ஸே செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், கலைஞர் வீடு கணக்கெடுப்பு, தூய்மை இந்தியா போன்ற தலைப்புகளில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். நாளை டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் எப் எல் 2, எப் எல் 3 பார்களையும் மூட வேண்டும். மீறி விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவாரூர், வாழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் கே. சபேஷ் என்கிற மாணவர் மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து தகுதிப்போட்டியில் தேர்வாகி காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார். மாணவர் சபேஷ்க்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வினோத் வினோத்துக்கும் சார்பாக தாளாளர், முதல்வர், வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 3 பேருக்கு 8 கிராம் தங்க நாணயத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தோட்டக்கலை துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விற்பனை வண்டியை கலெக்டர் வழங்கினார்.
திருவாருர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி வேட்டையில் 15 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 18 நபர்கள் கைது செய்தும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ 900 கிராம் எடையுள்ள (மதிப்பு ரூ.59,000) பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (29.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் பூவனூர் பகுதியை சேர்ந்த தயாநிதிமாறன், ஷியாம், மருதவனம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகியோர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கொடிக்கால்பாளையத்தில், ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி (RSETI) மூலம் மகளிருக்கு இலவச அலங்கார நகை தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 13 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 18-44 வயதுடைய பெண்கள் பங்கேற்கலாம். மேலும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944916793 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.