India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் 23.09.2024ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது. இதில் தொழிற்பயிற்சி பயிற்சி முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். SHAREIT
வலங்கைமான் வட்டம், தொழுவூர் ஊராட்சியில் இன்று காலை ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். காலை உணவினை சுமையிலிருந்து பெற்று சாப்பிட்டு பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் முறை குறித்து அவர் பார்வையிட்டார்.
மன்னார்குடி அருகே மேலத்திருப்பாலக்குடி எல்ஐசி முகவராக பணியாற்றி வருபவா் செந்தில்குமாா் (52). இவரது மனைவி கவிதா (48). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த செவ்வாய் வீட்டில் தனியே இருந்த கவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிதாவின் தந்தை உலகநாதன் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான் அருகே உள்ள கீழ் மாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடைக்கு சென்று அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இன்று (செப்.18) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு 29 மனுக்களை அளித்தனர். அதனை பெற்று கொண்ட எஸ்.பி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டார்.
புள்ளமங்கலத்தில் பள்ளி வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் மண்டை உடைப்பு. புள்ளமங்கலம் அரசு பள்ளிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்த வாகனங்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் ஓட்டுநருக்கு ஆசிரியருடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டது, இதில் ஒப்பந்த மேலாளர் மற்றும் ஓட்டுநர், ஆசிரியரை கம்பியால் தாக்கியுள்ளார். அடிபட்ட ஆசிரியர் மருத்துவமனை சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும் இந்த கூட்டத்தில் அரசு விதிகளுக்கு உட்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை 18/9/24 அன்று மாணவ மாணவிகளுக்கான சிலம்பம், கால்பந்து மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகளும் மற்றும் பொதுமக்களுக்கான கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தினமும் காலை 8 மணி முதல் இரவு 5 மணி வரை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஞாயிறு தோறும் ஆதார் சேவை செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அறிவுறுத்தல்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளில் (செப்.17) மாவட்ட முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமுகநீதி நாள் உறுதிமொழியினை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.