India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையம் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 2024 தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 05.10.24 (சனிக்கிழமை) மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது. இதில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 5000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கேற்க www.tnprivatejobs.in.gov.in விண்ணபிக்கலாம் .மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூா் மாவட்டத்தில் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் சிறப்பான ஒன்றை தோ்ந்தெடுத்து ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் தனிநபா் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோா், தங்கள் நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை 04366-251779, 9444523125 எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 394 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.
திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டம் கீழ் இலவச தையல் இயந்திரம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு 20 முதல் 40வயது வரை தையல் தெரிந்தவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் அருகில் உள்ள இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்ட வருகின்றனர். 2வது நாளாக நேற்று நடைபெற்ற கைது நடவடிக்கையில் திருநெய்பேர், புதுக்குடி, குடவாசல் கோரையாறு, திருத்துறைப்பூண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்த 16 பேரை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குடவாசல் அடுத்த பரவக்கரையை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது கொலை, கொள்ளையை என 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக போலீசார் அவரை தேடி வந்தனர். இதனையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த ஐயப்பனை நன்னிலம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் நகர காவல் நிலைய பகுதியில் சட்ட விரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மருதப்பட்டிணம் மகாதீர்முகம்மது(24), நெய்விளக்கு ராஜ்குமார் (24), புலிவலம் சத்தியசீலன் (18), திருவாருர் அருண்குமார் (26) ஆகியோரை கைது செய்த டவுன் போலீசார், அவர்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நாளை (செப்.23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். மேலும் விபரங்களுக்கு 04366-227411 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.