Thiruvarur

News October 7, 2024

இழப்பீடு தொகை வழங்கிய திருவாரூர் கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த் துறையின் சார்பில் சவுதி அரேபியா நாட்டில் கடந்த 6-9-2023 அன்று உயிரிழந்த மன்னார்குடியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.40,000-க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ இன்று வழங்கினார் .

News October 7, 2024

திருவாரூரில் நாளை மின்தடை

image

திருவாரூர் துணை மின் நிலையத்தில் நாளை (அக்.8) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் கடைவீதி, தெற்கு வீதி, கீழவீதி, சேந்தமங்கலம், அடிக்கமங்கலம், நெய்விளக்கு தோப்பு, திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூர், பவித்திரமாணிக்கம், ஓடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

திருவாரூர் உட்கோட்ட காவலர்களுக்கு கவாத்து பயிற்சி

image

திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், இன்று நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

News October 5, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.5) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 5, 2024

திருவாரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

image

தென்புலியுரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற முதியவர் டீ குடிப்பதற்காக மன்னார்குடி-திருவாரூர் சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜமாணிக்கத்தின் மகன் மதியழகன் அளித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 5, 2024

திருவாரூரில் 1.9 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி

image

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 500 ஏக்கரில் நேரடி விதைப்பாகவும் நடவு பணியாக 47 ஆயிரத்து 500 ஏக்கரிலும் என மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியானது தற்போது நடைபெற்றுள்ளது. நீண்ட கால ரகங்களான சிஆர் 1009 மற்றும் ஏடிடி 51 மற்றும் 54 மற்றும் ஐ ஆர் 20 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி தெளிப்பு மற்றும் நடவு முலம் பயிரிட்டுள்ளனர்.

News October 5, 2024

இளைஞருக்கு 25ஆண்டுகள் சிறை

image

கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மகிளா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருவாரூர் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

News October 5, 2024

திருவாரூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை

image

திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவர்கள் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008 ன் படி விதி எண் 84ன் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவும் அல்லது இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்ட திமுக அவைத்தலைவர் க.தன்ராஜ் தலைமையில் வரும் 08.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருவாரூர் அஞ்சுகம் முத்துவேலர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என திருவாரூர் மாலட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 5, 2024

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (04.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

error: Content is protected !!