Thiruvarur

News December 10, 2024

வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது

image

திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து,முன்னேற்றத்திற்காக வீரதீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விபரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையத்தில் (http://awards.tn.gov.in) டிச.20 க்குள் பதிவேற்றம் செய்தால் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன.24 அரசின் பாராட்டு விருதும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும் என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

News December 10, 2024

நள்ளிரவில் திருட முயன்ற 4 பேர் கைது

image

வலங்கைமான் காவல் சரகத்திற்குட்பட்ட நார்த்தங்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (81). மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை உடைத்து கோவிந்தராஜை கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்றனர். இந்நிலையில், கோவிந்தராஜ் கூச்சலிடவும் அக்கம்பக்கத்தினர் வந்ததும் தப்பியோடினர். பின்னர், போலீசார் விசாரணையில், சஜாத் அலி, பிரபு ராஜா, செல்வகார்த்தி, கலையரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News December 9, 2024

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் விலகி தமிழக வெற்றி கழகத்தில் கூத்தாநல்லூர் நகர செயலாளர் மருது பாண்டியன், நகர தலைவர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் மதன் தலைமையில் இணைத்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

News December 9, 2024

திருவாரூரில் அரையாண்டு தேர்வு தொடக்கம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இன்று டிசம்பர் (9)அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு தொடங்கவுள்ளது. இன்று தமிழ் தேர்வு தொடங்கவுள்ளது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் டிச.10 மற்றும் 11ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

News December 7, 2024

லயன் சங்கத்தின் சார்பில் உடல் தானம்

image

திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் சின்னம்மா சரோஜினி நேற்று இயற்கை எய்தினார். இந்நிலையில் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அவரது உடல் தானமாக பெறப்பட்டு இன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த செயல் அந்த பகுதி மக்களின் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யவும்

News December 7, 2024

உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

image

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள சீன பூண்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை அடுத்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். பின்னர் சீன பூண்டு எங்கேயும் விற்பதாக தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 7, 2024

குழந்தைக்காக உதவிக்கரம் கோரும் பெற்றோர்!

image

நன்னிலத்தில் சௌந்தர்யா-மதியழகன் தம்பதியின் 5 மாதக் கை குழந்தை வர்ணிகா ஸ்ரீ மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்லார். இந்நிலையில், குழந்தைக்கு வேண்டிய ஊசியின் விலை ரூ.16 கோடி ஆகும். ஒவ்வொருவரும் ரூ.10 கொடுத்ததால் என் குழந்தையை காப்பாற்ற உதவியாக இருக்கும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர். 

News December 7, 2024

அலையாத்தி காட்டுக்கு செல்ல அனுமதி

image

ஆசியாவின் மிகப்பெரிய காடான முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல வனத்துறை சார்பில் படகுகள் உள்ளது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வனத்துறை தடை விரித்து இருந்த நிலையில் தற்போது சகஜ நிலைக்கு வந்ததால் இன்று முதல் தடையை நீக்கி படகில் சுற்றுலா செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

News December 7, 2024

துணை முதல்வர் உதவியாளர் எனக் கூறி மோசடி

image

திருவாரூர் நகராட்சி அலுவலக தொலைபேசி எண்ணுக்கு கடந்த 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடர்பு கொண்டு நான் தமிழக துணை முதல்வரின் உதவியாளர் எனக் கூறி நகராட்சி ஆணையரிடம் ரூபாய் 7500 மோசடியில் ஈடுபட்ட, எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரை காவல் துறையினர் நேற்று கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!