Thiruvarur

News October 13, 2024

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்த்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2024

திருவாரூர் மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த மூன்று நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் மூன்று நாட்களில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 102 நபர்களை கைது செய்தும், குடி போதையில் வாகனம் ஓட்டிய 80 நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 13, 2024

திருவாரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து

image

திருவாரூர், இடையூரை அருகே மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சந்திர மோகன். இவர் தனது வீட்டில் இருந்து காரில் வந்து கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமிருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து, அதில் பயணித்த மூவரையும் மீட்டனர். இதுகுறித்து இடையூறு காவல்துறை விசாரணை செய்து வருகிண்டனர்.

News October 13, 2024

திருவாரூர் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

image

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23, 24 ஆகிய தேதிகளில், திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் பங்குபெற அந்தந்த பள்ளி கல்லூரி மாணவ – மாணவியர்கள் கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 12, 2024

திருவாருர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் இன்று போலீசார் நடத்திய சோதனையில் மேலவாடியக்காடு வைரமுத்து, ஆதிச்சபுரம் ஆகாஷ், பாமணி ஜெகதீஸ், கீழப்பனையூர் கணபதி, பாமனி வில்சன், உள்ளூர் வட்டம் அய்யப்பன் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

News October 12, 2024

அல்லா ஏசு கொலு வைத்த பள்ளி ஆசிரியர்

image

நன்னிலம் சாலையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தராஜன் காந்திமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் 40 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த குழுவில் எந்த விதமான பாகுபாடு இன்று அல்லாஹ் இயேசு தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து மதமும் சம்மதமும் எனப் போற்றும் வகையில் கொலு வைத்து வழிபட்டு வருகிறார்.

News October 12, 2024

திருவாரூர் பள்ளியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா

image

விளமல், கல்லு பாலம் எதிரே அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளியில் நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள் பயணிக்க கூடிய வாகனங்கள் மற்றும் பள்ளி சார்ந்த வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு மாலை வாழைக்கன்றுகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் பள்ளி நிர்வாகிகள் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News October 11, 2024

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் மாஜி அமைச்சர் தரிசனம்

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று சாமி தரிசனம் செய்தார். இதில் வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News October 11, 2024

முதன்மை கல்வி அலுவலருக்கு பாராட்டு

image

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நீடாமங்கலம் அருகே பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News October 11, 2024

குழந்தை விற்பனை – 3 பேர் மீது வழக்கு

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே 10 மாத பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்.9ஆம் தேதி குழந்தை விற்கப்பட்ட நிலையில், சைல்டு ஹெல்ப்லைனுக்கு வலங்கைமான் பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!