Thiruvarur

News December 28, 2024

முத்துப்பேட்டை: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

image

முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பண்ணை பொது கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (46). விவசாயியான இவர் நேற்று மாலை 6 மணியளவில் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி அருகில் இருந்த செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். தகவல் அறிந்து வந்த எடையூர் போலீசார் ராஜாவிடம் பேசி அவரை கீழே இறங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 27, 2024

குடவாசல் அருகே ஏழு பேர் மீது வழக்குப் பதிவு

image

குடவாசல் அருகே ஓகை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்துள்ளார். அவர் பணத்தை திருப்பி கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டு முரளியை வீட்டின் அருகே சுகந்தி, கேசவன், இளங்கோவன், துரைப்பாண்டி ,வெங்கடேஷ், சக்திவேல், சுகன்யா ஆகிய ஏழு பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2024

கோலம் போடுவதில் தகராறு: யோகா மாஸ்டர் மீது தாக்குதல்

image

நீடாமங்கலம் அருகே உள்ள தெப்பக்குளம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் யோகா மாஸ்டர். இவரின் எதிர் வீட்டுக்காரர் வாசு. இருவருக்கும் யார் முதலில் கோலம் போடுவது என்ற போட்டி இருந்த நிலையில், சாமிநாதன் நேற்று வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வாசு, சுகுணா, வீரமணி உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2024

திருவாரூரில் ரூ.69 லட்சம் மோசடி

image

திருவாரூர் துர்க்காலையா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரை வாட்ஸ்ஆப் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் சிபிஐ-யில் இருந்து பேசுவதாக கூறி, மனித கடத்தல் மற்றும் போதை பொருள் வழக்கில் உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டியுள்ளார். இதனை நம்பிய பத்மநாபன் மர்ம நபரின் வங்கி கணக்குக்கு ரூ.69.39 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News December 27, 2024

காலநிலை மாற்றத்தால் தவிக்கும் திருவாரூர் மாவட்டம்

image

காலநிலை மாற்றத்தால் தமிழக டெல்டா மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதீத மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் வேளாண் உற்பத்தியானது பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து டெல்டா மாவட்டங்களுக்கும் அரசு சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. SHARE!

News December 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 53 குண்டர் சட்டத்தில் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 53 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் மாவட்டத்தில் 206 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (26.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

image

மன்னார்குடி அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கோபாலசமுத்திரம் வடக்கு வீதியைச் சேர்ந்த அஜித்கரன் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், மன்னார்குடி காவல் துறையினர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 26, 2024

முத்துப்பேட்டை: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது

image

முத்துப்பேட்டை அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை முத்துப்பேட்டை அருகே மன்மத கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த டிச.22-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இது சம்பந்தமாக சிறுமியின் தாய் செல்வேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல்துறையினர் ஐயப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 26, 2024

திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் அனல் பறக்கும் அரசியல் வரலாறு

image

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஆரம்பத்தில் தனித்தொகுதியாக இருந்த திருவாரூரில் 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில், திமுக – 8, சி.பி.எம் – 4, காங் 2 முறை வென்றுள்ளது. ஆனால் இதுவரை அ.தி.மு.க. இந்த தொகுதியில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஷேர் செய்யவும்!

error: Content is protected !!