India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 54 ஆசிரியர்களை 6 நாள் கல்வி சுற்றுப்பயணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார். அதில் தேர்வான திருவாரூர் தியானபுரம் அரசு பள்ளி ஆசிரியர் மு.அன்பழகனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ்களுடன் 18.10.2024 முதல் 30.10.2024 ஆம் தேதி வரை விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெற, ஆதார் அட்டை மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனை பெயர் குறிப்பிட்டு www.swavlambancard.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பின்னர் முகாம் நடைபெறும் தேதி தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். ஷேர் செய்யவும்
திருவாரூர் சந்திப்பு – திருத்துறைப்பூண்டி சந்திப்பு – காரைக்குடி சந்திப்பு ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் இன்று திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி மார்க்கம் வண்டி எண் 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிகாலை 2.00 மணி, திருத்துறைப்பூண்டி – அதிகாலை 2.29 மணி, முத்துப்பேட்டை – 2.54 மணி, பட்டுக்கோட்டை – 3.23 மணி சேர்கிறது. ஷேர் செய்யவும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்கு கூடும் இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. எந்தவித இடையூறும் இன்றி பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைவீதிகளில் அதிகமாக கூட்டம் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கவனமாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆற்றல்மிகு மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். மற்றும் பத்தினியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களான தமிழ் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் எழுதுதல் கூட்டல் கழித்தல் ஆகிய அடிப்படை கணித திறன்களை சோதித்தறிந்து கற்றலை இனிமையாக்குவது எப்படி என்பது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வலங்கைமான், ஆவூர் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவிந்தங்குடி, ஏரி, வேலூர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை நீடிக்கிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 54 ஆசிரியர்களை 6 நாள் கல்வி சுற்றுப்பயணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரான்ஸ் நாட்டிற்கு நாளை அழைத்துச் செல்லப்பட இருக்கிறார். அதில் தேர்வான திருவாரூர் தியானபுரம் அரசு பள்ளி ஆசிரியர் மு.அன்பழகனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ்களுடன் 18.10.2024 முதல் 30.10.2024 ஆம் தேதி வரை விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தனிப்படை அமைத்து மாதமுடிவில் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 நபர்கள் மீது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.