Thiruvarur

News March 5, 2025

திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

image

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

News March 5, 2025

திருவாரூர் மருத்துவ தொழில் தேர்வுக்கான ஆங்கில பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிஎஸ்சி, எம்.எஸ்.சி நர்சிங் முடித்த ஆதிதிராவிட இன மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மோகசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க.

News March 4, 2025

நாம் தமிழர் நூதன போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் தீர்வு ஏதும் கிடைக்காததால், வரும் 5/03/2025 புதன்கிழமை குப்பையில் குடியேறும் நூதனப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பேரூராட்சி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காணப்படும் என நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி விளையாட்டு மன்றங்கள் அமைக்கபட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் என அனைவரும் மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News March 3, 2025

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை பார்வையிட்ட முதல்வர்

image

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரும் வழியில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஏராளமானோர் உடனிருந்தனர்.

News March 3, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் ஆட்சியர் வி.மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகள் அனைவரும் இம்மாத இறுதிக்குள் தங்கள் நில உடைமை விவரங்களை சரிபார்க்க வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க.

News March 2, 2025

திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

image

இந்தியா முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (*CUET-UG*) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் (CUET-UG 2025) கான பொது நுழைவுத் தேர்வு வருகின்ற மே.8 முதல் ஜூன்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச்.1 முதல் வரும் மார்ச்.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News March 2, 2025

திருவாரூர: பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்பாடுகள் மும்மரம்

image

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச்.3) திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 13,599 மாணவ மாணவிகள் நாளை எழுத உள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் முதன்மை கல்வி அலுவலர் செளந்தரராசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

News March 2, 2025

திருவாரூரில் டிரோன்கள் பறக்க தடை

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வழியாக நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்ல உள்ளார். இந்நிலையில் திருவாரூரில் முதலமைச்சர் செல்லும் பாதை ரெட்டி ஷோன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் திருவாரூரில் முதல்வர் செல்லும் வழியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!