India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா வருகிற 7ஆம்தேதி நடைபெறுகிறது. அதன் காரணமாக தேர்வலம் வரக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் 2ஆம் தேதி நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினம் சம்பந்தபட்டவரிடம் வசூல் செய்யபடும் என அறிவித்திருந்தார். SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும் என ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு அமைக்காத நிறுவனங்கள் மீது ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட விவரத்தினை http://www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை.
திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் ஏப்.7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேர் வடம் பிடிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ப.இராணி, பரம்பரை அறங்காவலர் ராம். தியாகராஜன் மற்றும் திருவாரூர் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
> சொர்ணபுரீஸ்வரர் கோயில் > தியாகராஜர் கோயில் >பிரம்மபுரீஸ்வரர் கோயில் >ஐராவதீஸ்வரர் கோயில் >கூத்தனூர் சரஸ்வதி கோயில் >முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் >மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் > குடவாசல் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் >வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில். இன்று ஞாயிறு என்பதால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள். மற்றவர்களும் அருள் பெற SHARE செய்து உதவுங்கள்.
திருவாரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில். இங்கு கையில் கலப்பையுடன் அருள்பாலிக்கிறார் பொங்குசனீஸ்வரர். இத்தலத்தில் சனிபகவான் குபேர மூலையில் மகாலட்சுமி ஸ்தானத்திலிருந்து பக்தர்களுக்கு இழந்த செல்வத்தை வழங்குவதாக ஐதீகம். சனிக்கிழமைகளில் இங்கு 27 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீராத தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. இதை மறக்காமல் உங்க நண்பர்களுக்கு பகிரவும்!
திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இதுவரை 1579 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செளந்தரராசன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 60 வகையான நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டினம் பகுதியில் சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான வராஹப் பெருமான் கோயில் உள்ளது. தற்போது இப்பகுதி மகாதேவபட்டினம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர்களுக்கு இடையே சன்னதியில் வராஹப் பெருமான் காட்சி தருகிறார். வாரம்தோறும் சனிக்கிழமைகள் வராஹப் பெருமானின் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். SHARE பண்ணுங்க.
திருவாரூர் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன், அணக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, திருவாரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் பாலமுருகன் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை தமிழக அரசு 07/09/2023 முதல் வழங்கிவருகிறது. இந்த அட்டைகள் 31/03/25 வரைதான் செல்லுபடியாகும் என்ற நிலையில் அட்டையினை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளு மாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வானில் இருந்து பலத்த சத்தம் கேட்ட விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மோகனச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய விமானப் படையின் SONIC BOOM, அதாவது ஒலியைவிட வேகமாகச் செல்லும் விமானத்தை இயக்கிப் பார்த்ததால் ஏற்பட்ட சத்தம் என தெரிவித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.