Thiruvarur

News March 31, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (31.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News March 31, 2025

திருவாரூரில் மாற்றுத் தேதிகள் அறிவிப்பு 

image

திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச்.31) ரமலான், ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் கூட்டங்கள் மாற்றுத் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். 

News March 31, 2025

திருவாரூரில் மாற்றுத் தேதிகள் அறிவிப்பு 

image

திருவாரூரில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச்.31) ரமலான், ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் கூட்டங்கள் மாற்றுத் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். 

News March 31, 2025

திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News March 31, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

image

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு,  முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.. 

News March 31, 2025

திருவாரூர் மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

திருவாரூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 31, 2025

திருவாரூர்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 இலவச பயிற்சி துவக்கம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News March 31, 2025

திருவாரூர்: அரசு அதிகாரி மீது சி.பி.ஐ வழக்கு

image

காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே.ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் அவரது மனைவி விமலா பணியாற்றி வருகிறார். அவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவிற்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

News March 30, 2025

திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தேர்வில் மாற்றம்

image

திருவாரூர் மாவட்ட தொடக்க பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 09 முதல் 21 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு வருகின்ற ஏப்ரல் 07 முதல் 17 வரை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

News March 30, 2025

திருவாரூர்: அரசு அதிகாரி மீது சி.பி.ஐ வழக்கு

image

காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே. ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவரது மனைவி விமலா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவுக்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

error: Content is protected !!