Thiruvarur

News April 28, 2025

திருவாரூர்: மின்தடை புகார்களுக்கான எண்

image

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 28, 2025

திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

image

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 27, 2025

நோய் ஏற்படாமல் காக்கும் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

image

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE!

News April 27, 2025

திருவாரூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

News April 27, 2025

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க நளையே (ஏப்.28) கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யுங்கள். வேலைதேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 26, 2025

திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அன்சாரி என்பவர் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த பத்திரத்திற்காக தான் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டி மன்னார்குடி நுகர்வோர் சங்கம் மூலமாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அன்சாரிக்கு சேர வேண்டிய தொகை தராமல் அவரை அலைக்கழித்ததற்காக ரூ.60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இன்று தீர்ப்பளித்தது. 

News April 26, 2025

மன்னார்குடி: கடன் பிரச்சினை தீர சிறப்பு வழிபாடு

image

மன்னார்குடி ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ரணவிமோட்சகருக்கு நாளை (ஏப்.27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நீண்ட நாள் கடன் சுமை மற்றும் தீராத நோய்கள் உடையோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இப்போதே SHARE செய்யவும்..

News April 26, 2025

திருவாரூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 26, 2025

திருப்பாம்புரம்: ராகு – கேது தோஷம் நீக்கும் தலம்

image

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்பு நாதர் கோயில், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு – கேது பகவான் இடப்பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு நடக்கிறது. இத்தலத்தில் வழிபட்டால் ராகு – கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 26, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.26) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மழையில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!