Thiruvarur

News February 7, 2025

அறுவடை இயந்திரங்களின் விவரங்களை அறியலாம்: கலெக்டர்

image

திருவாரூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூா் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வரும் வேளையில், மொத்தம் 4,456 தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் தொடா்பு விவரங்கள் மாவட்ட வாரியாக ‘உழவன்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில், இவ்விவரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

News February 7, 2025

திருவாரூர்: போலி பாஸ்ப்போர்ட்டில் வந்தவர் கைது

image

மன்னாா்குடி புள்ளிக்கோட்டை, கீழத் தெருவை சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (55). இவா் சிங்கப் பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட வழக்கமான சோதனையில் அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருச்சி விமான நிலைய போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

News February 6, 2025

சோழர்களின் அசைக்க முடியாத கோட்டை திருவாரூர்

image

திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளின் மூலம் நாம் அறியலாம். மேலும் திருவாரூர் சோழர் காலத்தில் மிகவும் பாதுகாப்பான நகரமாகவும், விவசாயத்தில் சிறந்து விளங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் !

News February 6, 2025

மகனுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் மனு

image

கூத்தாநல்லூரை சேர்ந்த கணேசன் மகன் கவியரசன், சிங்கப்பூர் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், தங்கள் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாகை பாராளுமன்ற உறுப்பினரை இன்று (பிப்.6) நேரில் சென்று மனு அளித்தனர். மேலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

News February 6, 2025

நீடாமங்கலம்: காலை சிற்றுண்டியில் கிடந்த பல்லி

image

நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (பிப்.6) காலை மாணவ, மாணவியர்கள் 14 பேருக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. அப்போது பொங்கலில் பல்லி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் மாணவர்களை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்நிலையில் கலெக்டர் மோகனசந்திரன் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே<<>> கிளிக் செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 5, 2025

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது பயிர்களை வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு பிரிமியம் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.222.30 செலுத்த வேண்டும். மேலும் www.pmfby.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தொகை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !

News February 5, 2025

திருவாரூர்: நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவாரூா் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

முத்துப்பேட்டை: விளைச்சல் பாதிப்பால் விவசாயி தற்கொலை

image

முத்துப்பேட்டை வட்டம், உப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனியப்பன் (55). சுமார் 2.5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்த இவரது வயலில் அண்மையில் பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முனியப்பன் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 4, 2025

முத்துப்பேட்டையில் விவசாயி தற்கொலை

image

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் தற்போது பருவம் தவறி பெய்த தொடர் கனமழை காரணமாக 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்திருந்தார். தற்பொழுது பெய்த கன மழையால் அனைத்தும் சாய்ந்து அழுகியதால், வயிலை பார்த்த முனியப்பன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து அவர் இன்று வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!