Thiruvarur

News February 15, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 20 அன்று விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை பிப்ரவரி 15 பள்ளிகள் அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மாலை வேலை முடிவடையும் நேரத்தில் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்கள் இடத்தில் சற்று குழப்பம் நீடிக்கிறது.

News February 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

image

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் எடை இழப்பை தங்கள் மீது சுமத்துவதாகவும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அறுவடை தொடங்கி 25 நாட்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

News February 14, 2025

இளைஞர் கொலையில் மேலும் 7 பேர் கைது

image

கூத்தாநல்லூா் அருகே வடபாதிமங்கலம், மாயனூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (33). இவரது மனைவியின் மூத்த சகோதரா் சிவநேசன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த பிப்.8 ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் சோமசுந்தரத்தை தாக்கி கொலை செய்தது. இந்த கொலை வழக்குத் தொடா்பாக, சிவநேசன், கோபி, திலீபன் சூா்யா, வடிவழகன், விக்னேஷ், புதிய பாண்டி, சக்திதாசன், பூசங்குடி சுரேந்தா் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News February 13, 2025

தங்கப்பதக்கம் வென்ற திருவாரூர் வீரர்

image

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான தடகளம் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற மன்னார்குடி அடுத்த செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் என்பவர் 16.50 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

News February 13, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9 வகுப்புகளுக்கு பிப்ரவரி 24 முதல் 26 வரை காலை மாலை இருவேளையும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 8 வரையும் நடைபெறும் என திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9 வகுப்புகளுக்கு பிப்ரவரி 24 முதல் 26 வரை காலை மாலை இருவேளையும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 8 வரையும் நடைபெறும் என திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News February 13, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிப்ரவரி (13) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் உத்திரம்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், கூடூர் உள்ளிட்ட பகுதியில் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அதில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மனுக்களை பெற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 13, 2025

திருவாரூர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

image

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திரு வி கா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர் விருதகிரி நேற்று (பிப்.12) திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் விடுதி வசதிகள் மற்றும் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

News February 12, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. அரையாண்டு தேர்வில் ஒவ்வொரு பள்ளியும் பெற்ற தேர்ச்சி சதவீதம் கொண்டு மாவட்டத்தின் சராசரி சதவீதம் உயர்த்திட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் செளந்தரராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!